
தமிழக சட்டசபையில் இன்று கவர்னர் ரவி தனது உரை படிக்க அனுமதிக்கப்படாத கண்டித்து வெளியேறினார். அவர் சென்றதும் எடப்பாடி தலைமையில் அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில் ஆளுநர் சொன்ன குற்றச்சாட்டுகள் நியாயமானது தான் தமிழ்நாட்டில் நடப்பதை தான் அவர் கூறுகிறார். ஆனால் ஆளுநர் இவ்வாறு நடந்து கொள்வார் என எதிர்பார்த்து ஸ்டாலின் முன்கூட்டியே அறிக்கை தயாரித்து கொண்டு வந்து வாசிக்கிறார், என குற்றம் சாட்டினார்.