
2023-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே பெண்களுக்கான 10 சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை மற்றும் திருச்சி வெவ்வேறு பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
தனியார் நிறுவனமான அவதார் குழுமத்தின் சார்பில், இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த 10 நகரங்கள் – 2023 என்ற அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு, மக்கள் அளித்த மதிப்பெண்களின்படி வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கென, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களை ஒரு பிரிவாகவும், 10 லட்சத்துக்கும் குறைவான நகரங்களை ஒரு பிரிவாகவும் கொண்டு கடந்த ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் வரையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாடு முழுவதும் 113 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள நகரங்கள் பிரிவில், 49 நகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. 100-க்கு 48.42 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. 9-ஆவது இடத்தில் கோவை, 11-ஆவது இடத்தில் மதுரை இடம் பிடித்துள்ளன.