
நாடு முழுவதும் நான்கு மாத கால பருவமழைக் காலமான, தென் மேற்குப் பருவமழை, கேரளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என ஒரே நேரத்தில் தொடங்கியிருக்கிறது.
நாட்டின் ஒரு பக்கம் வரலாறு காணாத வகையில் கடுமையான வெயிலும், மறுபக்கம் கனமழையும் பெய்து வரும் நிலையில், கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக தென்மேற்குப் பருவமழை ஜூன் 1ஆம் தேதி கேரளத்தில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு இரண்டு நாள்கள் முன்னதாக தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால், இதுவரை கேரளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஒரே நேரத்தில் பருவமழை தொடங்கியதில்லை. இது வழக்கத்துக்கு மாறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.