சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை 2025 ஜனவரி 14ம் தேதி நடைபெறும். 2024ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 26ம் தேதி நடை சாத்தப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி கோயில் நடை அடைக்கப்படும்.
கேரளா: பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வரும் மலையாள நடிகர் சித்திக்கிற்கு புலனாய்வுக் குழு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து நாளிதழ்களில் அறிவிப்பை வெளியிட்டிருக்குது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து நாடு திரும்பிய கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 38 வயது நபருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதியானது
தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அந்த நபரின் உடல் நிலை சீராக உள்ளது. இந்நிலையில், அவருக்கு கிளாட்-1பி வகை குரங்கம்மை தொற்று ஏற்பட்டிருப்பதை ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.கடந்த 2022ல் ஆப்ரிக்காவில் இருந்து உலகம் முழுவதும் வேகமாக பரவக் காரணமானது கிளாட்-1பி வகை குரங்கம்மை வைரஸ். இதற்கு முன் இந்தியாவில் 30 பேருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அனைவருக்கும் கிளாட்-2 வகை வைரஸ் தொற்று இருந்தது. தற்போது வீரியமிக்க கிளாட்-1பி வகை […]
கேரளாவைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டு சென்ற மர்மநபர்கள் – எஸ்.பி. மருத்துவமனையில் விசாரணை
மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி சார்பு ஆய்வாளர் வனிதா மற்றும் காவலர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கடத்தல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவாணியில் அணை கட்ட அனுமதி கோரி கேரளா அரசு அளித்த விண்ணப்பத்தை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது
சிறுவாணி ஆற்றில் அணை கட்ட அனுமதி கோரி கேரள அரசு அளித்த விண்ணப்பத்துக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. கேரள அரசின் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழ்நாட்டின் எதிர்ப்பை அடுத்து விண்ணப்பத்தை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் திருப்பி அனுப்பியது.
கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை
ஜாதி, மத பேதமின்றிக் கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. “அத்தம் (ஹஸ்தம்) தொடங்கி பத்து நாள்வரை’ என்பது சொல்வழக்கு.ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் விழா, சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாளிலும் கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான திருவோணத்தன்று தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் “அத்தப் பூக்கோலம்’ […]
வயநாடு விபத்து நூறு குடும்பங்களுக்கு வீடு வைக்க இடம் தருகிறார் கேரளா நகைக்கடை அதிபர் போபி
செம்மண்ணூர்…. மேலும் வயநாடு பகுதி வியாபாரிகள் ,வெளி மாவட்ட வணிகர்கள் , மற்றும் வெளிமாநில வணிகர்கள் நிதி உதவிகள், அள்ளி தருகிரார்கள்.ஆனால் அமேசான்… ஃபிலிப் கார்ட் ….ச்விகி…. போன்ற ஆன்லைன் வர்த்தகர்களிடம் இருந்து எந்த உதவியும் இல்லை……சிந்தியுங்கள் சொற்ப லாபத்திற்கு நாம் உள்ளூர் வணிகர்களை மறந்து ஆன்லைன் வர்த்தகத்திற்கு ஆதரவு தராதீர்கள்….. நம்மில் ஒருவனாக இருக்கும் நம்மோடு சேர்ந்து இருக்கும் உள்ளூர் வணிகர்களுக்கு ஆதரவு நல்குவோம்… “ஆன்லைன் வர்த்தகம் ஒழிப்போம் உள்ளூர் சில்லறை வர்த்தகம் காப்போம்”..
“பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி தொடர நடவடிக்கை”
கேரளா வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வியை தொடர நடவடிக்கை. வீடுகளை இழந்த மக்களை தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை நிலவுவதால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ யாரும் நேரில் வர வேண்டாம். இறந்தோரின் உடல்களை பெற குடும்பத்தில் ஓரிருவர் மட்டுமே வந்தால்போதும் – கேரள முதல்வர் பினராயி விஜயன். வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
வயநாட்டில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மீட்புக் குழுவினரிடம் மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270ஆக அதிகரிப்பு
மீட்பு பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தீயணைப்பு துறையினர் தீவிரம் தோண்ட தோண்ட உடல்கள் கிடைப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் மீட்பு பணிகள் மேலும் ஒருவார காலம் நீடிக்கும் என அதிகாரிகள் தகவல்