WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%header%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

train – Page 2 – GST Road News

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%footer%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts LEFT JOIN wp_term_relationships ON (wp_posts.ID = wp_term_relationships.object_id) WHERE 1=1 AND ( wp_term_relationships.term_taxonomy_id IN (3267) ) AND wp_posts.post_type = 'wp_template' AND ((wp_posts.post_status = 'publish')) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

data-elementor-type="wp-post" data-elementor-id="17" class="elementor elementor-17">

ஓடும் ரயிலில் படியில் நின்று ஆட்டம் போட்ட பெண் கைது

நாகர்கோவில் அடுத்த தளவாய்புரத்தை சேர்ந்த ஷகிலா பானு. ஓடும் ரயிலில் படியில் நின்று ஆட்டம் போட்ட ரீல்ஸ் வைரலாக,இப்பெண் மீது ரயில்வே துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் எழுந்தது தற்போது தான் செய்தது தவறு எனவும் இதனால் மன உளச்சலுக்கு ஆளாகிவிட்டேன் என மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.இதற்கிடையே இன்று அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்

புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள் இன்று திறப்பு

தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று (மே 22) தொடங்கி வைக்கிறார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் திறந்து வைக்கிறார். சென்னை பரங்கி மலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி நிலையங்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் திறக்கப்படுகின்றன.

தாம்பரம் இரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்காத பயணியும் பரிசோதனை அதிகாரியும் கைகலப்பு

செங்கல்பட்டுவில் இருந்து சென்னை கடற்கரை சென்ற மின்சார ரெயிலில் முதல்வகுப்பு பெட்டியில் லோகேஷ்(37) என்பவர் பயணித்துள்ளார்.அப்போது தாம்பரம் வருமுன்பாக பெண் டிக்கெட் பரிசோதகர் பிரித்தி சோதனை செய்தபோது முதல் சாதாரண பெட்டியில் பயணம் செய்யும் டிக்கட் மட்டும் எடுத்தது தெரிய வந்தது, இதனால் தாம்பரத்தில் அபராத தொகை வசுலிக்க கூட்டிச்சென்ற நிலையில் தப்பியோடியுள்ளார், பெண் டிக்கெட் பரிசோதகர் பிடிக்க சொல்லி குரல் எழுப்பியதால் அங்கு டீ குடித்துக்கொண்டு இருந்த பேனிஷ் என்கிற டி.டி.ஆர் உள்ளிட்ட இருவர் பிடித்துள்ளனர், […]

ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்ததால் 5 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு

விக்ரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் மதுரை – சென்னை வைகை விரைவு ரயில் காரைக்குடி – சென்னை பல்லவன் விரைவு ரயில் சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரயில் சென்னை – மதுரை தேஜாஸ் விரைவு ரயில் ஆகிய 5 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.

மின்சார ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று முதல் 28 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே 14 ரயில்கள், தாம்பரம்-கடற்கரை இடையே 14 ரயில்கள் ரத்து; இரு மார்க்கங்களிலும் 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 200 ரயில்கள் இயக்கப்படும்

மேலும் 10 புதிய வந்தே பாரத் ரயில்கள்.!

நாட்டில் விரைவில் 10 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதிவேக ரயில்களான வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் இயக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வருகிற செப். 15ம் தேதி 10 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஜார்கண்ட் மாநிலத்தில் புதிய ரயில்களின் துவக்க விழா நடைபெற இருக்கிறது. வாரணாசி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வந்தே பாரத் ரயில்வே இயக்கப்பட உள்ளன.

VandeBharat ரயிலை இயக்க அடித்துக் கொண்ட ஊழியர்கள்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு புதிய வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் புதிய ரயில் ராஜஸ்தானின் காங்காபூர் நகருக்கு கடந்த 2-ம் தேதி வந்தபோது, அந்த ரயிலை ஓட்டுவதற்கு ரயில் டிரைவர்கள் போட்டியிட்டனர். இதனால் அவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 3 டிரைவர்கள் இன்ஜின் அறையின் ஜன்னல் வழியாக நுழைந்து உள்ளே செல்ல முயன்றனர். வந்தே பாரத் ரயிலில் ஏற்கெனவே வந்திருந்த ரயில் ஓட்டுநர்களை, இவர்கள் அடித்து வெளியேற்றினர்.

விநாயகர் சதுர்த்தி: சென்னை – கோவை சிறப்பு ரயில்.!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செப்டம்பர் 6 பிற்பகல் 3:45 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, ஈரோடு, திருப்பூர் வழியாக 11:45-க்கு கோவை சென்றடையும். இதே போல் மறுமார்க்கத்தில் செப்டம்பர் 8-ம் தேதி கோவையிலிருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு காலை 7:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.