இணையசேவை இல்லாமல் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அதிகபட்ச தொகையை ₹200ல் இருந்து ₹500 ஆக அதிகரித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

Near Field Communication மூலம் இவ்வகை பணப்பரிமாற்றம் நடக்கிறது.
ரூ.2,000 நோட்டு மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு இல்லை

புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளை செப்டம்பர் 30க்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. இந்த காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுமா? என மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “தற்போதைய நிலையில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு குறித்த பரிசீலனை எதுவும் அரசிடம் இல்லை” என்றார்.