சர்வதேச நாடுகள் போர் நிறுத்தத்தத்திற்கு அழுத்தம் தரும் நிலையில், ‘காசா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்துவதற்கான திட்டமும் இருக்கிறது’ என இஸ்ரேல் அமைச்சர் அமிசாய் எலியாகு கூறியிருப்பது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது

பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் படையினருக்கு இடையேயான போர் ஒருமாதத்தை நெருங்கி உள்ளது. காசாவின் வடக்கு பகுதியில் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது காசா சிட்டி முழுவதும் இஸ்ரேல் படை முற்றுகையிட்டுள்ளது. இனியும் அப்பகுதியில் மக்கள் தங்கியிருந்தால் அது தற்கொலைக்கு சமம் என மிரட்டல் விடுத்துள்ளது. ஏற்கனவே வடக்கு காசாவில் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் படை தாக்குதல் நடத்திய நிலையில், நேற்று அதிகாலை மத்திய காசாவில் உள்ள அல் […]
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 9 பேர் காணவில்லை என தகவல்!
இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஏமன் இணைந்தது

பாலஸ்தீனத்தின் காசா முனை மீது போர் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பினரும் களம் குதித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். பாலஸ்தீன வெற்றிக்காக இந்த தாக்குதல் தொடரும் என்று ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலஸ்தீன வெற்றிக்காக இந்த தாக்குதல் தொடரும் என்று ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக். 7 தாக்குதலில் தொடர்புடைய ஹமாஸ் படைத் தளபதி மரணம்: இஸ்ரேல்

காஸாவின் ஜாபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் படையின் முக்கிய தளபதி உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் படையினர் கடந்த அக். 7 ஆம் தேதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே போர் 25 நாள்களை எட்டியதுடன் தீவிரமடைந்தும் வருகிறது. வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டிருந்த ஹமாஸ், தற்போது தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 4 நாள்களாக எல்லைப் பகுதிக்குள் தாக்குதல் நடத்தியவாறு கொஞ்சம் கொஞ்சமாக காஸாவுக்குள் […]
போர் எதிரொலி – 2வது முறையாக இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க வெளியுறவு மந்திரி

வாஷிங்டன்:இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நாளை மறுதினம் […]
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்துவரும் நிலையில், ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 6வது சிறப்பு விமானம் மூலம் 143 பேர் இந்தியா திரும்பினர்
போரால் உருக்குலைந்துள்ள காசாவில் மனிதாபிமான உதவிகள் வழங்க அமெரிக்கா – இஸ்ரேல் ஒப்புதல்

காசாவிற்குள் பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது குறித்து அமெரிக்கா – இஸ்ரேல் ஆலோசனை மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுப்ப ஒப்புக்கொண்ட இஸ்ரேல் நிலைப்பாட்டை வரவேற்கிறோம்-அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென்
ஹமாஸ் அமைப்பு முக்கிய தலைவர் உயிரிழப்பு

இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒசாமா மசினி உயிரிழப்பு. ஹமாஸின் முக்கிய தலைவர் ஒசாமா அல் மசினியின் வீட்டை குறிவைத்து தாக்கியதில் உயிரிழப்பு – இஸ்ரேல் ராணுவம்.
போர் ஒத்திகையை பாதியில் நிறுத்திய சீனா

சீனாவும் ரஷ்யாவும் இணைந்து கடற்பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த ஒத்திகை தொடர்ந்தால், போர் சூழல் உருவாகும் எனக் கருதிய சீனா இந்த ஒத்திகையை பாதியில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவுடனான நட்பு தொடரும் என்றும் சீன ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைனை பலமாகத் தாக்கத் தயாராகும் ரஷ்யா

ரஷ்யா மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இது, மாஸ்கோ அருகே இரு கட்டடங்களை சேதப்படுத்தின. ஆனால், இதில் உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ரஷ்ய ராணுவம், உக்ரைனுக்கு தக்க பதிலடி கொடுக்கத் தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாஸ்கோ நகர சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன.