கேரளாவில் பரவி வரும் புதிய நோய்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ‘புருசெல்லோசிஸ்’ என்ற புதிய நோய் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெம்பாயம் பகுதி அருகே உள்ள வேற்றிநாடு என்ற இடத்தில் இந்த தொற்றுக்கான அறிகுறி சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் கால்நடைகளிடம் இருந்து இந்த தொற்று பரவி தந்தை மற்றும் மகனுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா

இங்கிலாந்தின் மோசமான காலநிலை காரணமாக அங்குள்ள மக்களுக்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. இது அதிகமான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் இது குறித்து ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் இங்கிலாந்தில் ஏழு பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாகவும், இதற்கு கிரேக்க தெய்வத்தின் பெயரான எரிஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.