விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி; விஜயகாந்தின் நினைவிடத்திடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது; பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக இது போற்றப்படுகிறது
கனிமொழி எம்.பி தனது தாயாருடன் விஜய்காந்தின் இல்லம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்
விஜயகாந்த் நல்ல மனதுடைய மனிதர், நல்ல அரசியல்வாதி”

“விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே பலர் அவரை சாமி என்று அழைத்துள்ளனர்” “விஜயகாந்தை முன்னுதாரணமாக வைத்து தான், நடிகர் சங்கத்தில் நாங்கள் செயல்படுகிறோம்” “விஜயகாந்தின் அலுவலகத்தில், எப்போதும் சமையல் நடந்து கொண்டே இருக்கும்” “அனைவரையும் சரிசமமாக பார்த்த ஒரே நடிகர் விஜயகாந்த் தான்”
நடிகர் சங்கத் செயலாளர் விஷால் கோயம்பேட்டில் உள்ள கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு
சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மறைந்த கேப்டன் விஜயகாந்த் குடும்பத்தினருக்கு, ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் ஆறுதல் கூறினார்
மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு நினைவேந்தல் கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், வரும் 19ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடல்நலக்குறைவால் காலமான தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, தமிழ்நாடு அரசின் சார்பில் அளிக்கப்பட்ட அரசு இறுதி மரியாதை நிகழ்வில் கலந்து கொண்டார்

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, சட்டமன்ற உறுப்பினர்வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் காலமான தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்
தீவுத்திடல் நோக்கி கேப்டன் உடல் பயணம்
தீவுத்திடல் மைதானத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது