அரசை விமர்சித்து எழுதுவதனாலேயே மட்டுமே, பத்திரிகையாளர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யக்கூடாது

உ.பி. மாநில நிர்வாகத்தில் நிலவும் சாதிய பாகுபாடு குறித்து கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் அபிஷேக் உபாத்யாய்க்கு எதிராக பதிந்த FIR-ல் இடைக்கால பாதுகாப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் கருத்து

தமிழ்நாடு அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

தமிழ்நாட்டில் மீன் பிடிக்க சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக் கோரிய வழக்கில் நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையை அமல்படுத்தாததால் தமிழ்நாடு அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி. சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கௌரவம் பார்ப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அனுமதியின்றி குடியிருப்புகளை இடிப்பதற்கு விதித்த இடைக்கால தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் குடியிருப்புகள் இடிக்கப்படும் விவகாரத்தில் வழிகாட்டுதல்கள் வழங்குவது தொடர்பான வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசியது ஏன்?, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர், அதன்முடிவு வருவதற்கு முன்பே பொதுவெளியில் பேசியது ஏன்? என உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. சந்திரபாபு நாயுடு மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் நீதிபதி கவாய் அறிவுறுத்தியுள்ளார்.

செந்தில் பாலாஜி ஜாமின் பிணைத் தொகையை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு

செந்தில் பாலாஜி ஜாமின் பிணைத் தொகையை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவுக்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜி இன்று வெளியே வரக் கூடாது என முடிவு செய்துவிட்டதை போல் நீதிபதி செயல்படுவதாகவும், நீதிபதியின் முடிவு புதிய நடைமுறையாக உள்ளது எனவும் நீதிபதியின் முடிவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் எனவும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.

சாட்சிகளை தொடர்பு கொண்டால் ஜாமின் ரத்து

சாட்சிகளை தொடர்பு கொண்டால் ஜாமின் ரத்து அரசு தரப்பு சாட்சிகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்ள முயன்றால் ஜாமின் ரத்தாகும் செந்தில் பாலாஜிக்கு 6 நிபந்தனைகளை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். நிபந்தனைகளை மீறினாலும் ஜாமின் ரத்தாகும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

செந்தில் பாலாஜி ஜாமின் நிபந்தனைகள்

மீண்டும் அமைச்சராக தடை எதையும் உச்சநீதிமன்ற நிபந்தனையாக விதிக்கவில்லை “செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களாக விசாரணை குற்றவாளியாக இருப்பதால், அவரின் அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது; ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போடவேண்டும்; இவ்வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் அவர் ஒத்துழைப்பு தரவேண்டும்; இன்று மாலை அல்லது நாளை காலை அவர் சிறையில் இருந்து வெளியே வருவார்” 25 லட்ச ரூபாய் […]

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.செந்தில் பாலாஜி 471 நாட்கள் பிறகு சிறையில் இருந்து வெளியே வருகிறார்

“சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் இல்லை என்றபோதும் ஜாமின் “

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம். சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் இல்லை என்றபோதும் ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம். 2 வழக்குகளிலும் ஜாமின் கிடைத்ததால் சிறையிலிருந்து விரைவில் வெளியே வரவுள்ளார் கெஜ்ரிவால்.