செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 41 வது வார்டு பகுதியில் சரவணா நகர் பூங்காவில் 2245 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடந்தது

தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மரக்கன்று எடுத்துக் கொடுத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் திருமதி ராஜலட்சுமி, மேயர் திருமதி வசந்தகுமாரி கமலக்கண்ணன்* செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப்சந்திரன்* மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் மாநகராட்சி பொறியாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தாம்பரம் மாநகராட்சி இடம் மாற்றம் 43 கோடியில் புதிய கட்டிடம் உருவாகிறது

தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டினார் அமைச்சர் நேரு மழை பெய்யட்டும் ஏரிகள் நிரம்பட்டும் அப்படி என்றால் தான் சென்னையில் குடிநீர் தேவை பூர்த்தியாகும் அமைச்சர் பேட்டி தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலகக் கட்டடம் ரூ.43.40 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி தாம்பரம் சனடோரியம் பகுதியில் நடைபெற்றது, ரூபாய் 43.40 கோடி மதிப்பீட்டில் 4.69 ஏக்கர் பரப்பளவில், ஒருலட்சத்து 34 ஆயிரம் சதுர அடியில், தரைத்தளத்தில் 100 கார்கள், 390 இருசக்கர வானங்கள் […]
தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு 10 வழித்தடங்களுக்கு மாநகர பேரூந்துகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கொடியசைத்து துவக்கிவைத்தார்

தாம்பரம் பேரூந்து நிலையத்தில் இருந்து மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 10 புதிய வழித்தடத்தில் மாநகர பேரூந்துகளை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கொடியசைத்து துவக்கிவைத்தார், பின்னர் பொதுமக்களுடன் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா,தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மண்டலகுழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன் ஆகியோர் சிறிது தூரம் பயணம் மேற்கொண்டனர்.
தாம்பரத்தில் திமுகவினருக்கு தங்கம், வெள்ளி நாணயம் பரிசு

மறைந்த முன்னாள் நகர துணை செயலாளர் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகள், தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய திமுகவினர் 30 பேரில் 9 தங்கம், 21 வெள்ளி நாணயங்களை வழங்கினார். மறைந்த முன்னாள் நகர துணை செயலாளர் திருமதி.சுப்புலட்சுமி சர்தார் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, அவரது மகனும் மாநகர துணை அமைப்பாளர் ச.ராஜேஷ் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்சி நடைபெற்று, சிறப்பு அழைப்பாளராக […]
செம்பாக்கம் மண்டலம் 39 ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் கட்டன் கால்வாய் பணிகளை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்

மேலும் மழைக்காலத்திற்கு முன்பாகவே கால்வாய் பணிகளை துரித நடவடிக்கை கொண்டு முடித்து தருமாறு மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி முதன்மை செயல் பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிரிஜாசந்திரன் திருமலை நகர் மற்றும் சரஸ்வதி நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் வைத்த கோரிக்கையை அவரிடம் பரிந்துரைத்து மக்கள் நலப் பணிகளை செவ்வனே முடித்து […]
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சட்டமன்ற தொகுதியில், தாம்பரம் & வண்டலுர் இரயில் நிலையங்களுக்கு இடையில் இரயில்வே கடவு எண். 32க்கு பதிலாக பெருங்களத்தூர் இரயில் நிலையம் அருகில் இரயில்வே திட்டப் பணிகளின் கீழ் ரூ.60.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தினை

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், தலைமையில் குறுசிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். உடன் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக் குழு தலைவர்கள் து.காமராஜ், சு.இந்திரன், மாமன்ற […]
பரிமளா சிட்டிபாபு எஸ்.ஆர்.ராஜாவிடம் வாழ்த்து

தாம்பரம் மாநகர திமுக மகளிர் அணி அவைத்தலைவர் பரிமளா சிட்டிபாபு பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகர கழக செயலாளரும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.ராஜாவிடம் வாழ்த்து பெற்றபோது எடுத்தபடம்.
தாம்பரம் ஜிஎஸ்டி சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளர் 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ், காவல் துறை, நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை, தாம்பரம் மாநகராட்சி ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பல்லாவரத்தில் மறைமலை அடிகளார் பிறந்த நாள் விழா

தமிழ்வளர்ச்சி துறை சார்பில் தனித்தமிழ் இயக்க தந்தை மறைமலை அடிகளாரின் 148 வது பிறந்தநாள் விழா, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாலை அணிவித்து மறியாதை செய்தார் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளாரின் 148வது பிறந்தநாளை யொட்டி பல்லாவரம் மறைமலை அடிகல் தெருவில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அன்னாரின் திரு உருவ சிலைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற […]
தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கோரிக்கை வைத்ததன் பேரில், 16 கோடி ரூபாய் அரசு நிதியில் செம்பாக்கம் ஏரியின் தூய்மைபணி மற்றும் 8 எம் எல் டி அளவிற்கு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது

இதனையொட்டி சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளர் அதுல் மிஷ்ரா , வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை செயலாளர் உஷா காகர்லா , தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் அழகு மீனா மற்றும் அதிகாரிகள், நேரில் வந்து செம்பாக்கம் மற்றும் சிட்லபாக்கம் ஏரியின் புனரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வின்போது 43வது மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன், குடியிருப்போர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், ஸ்ரீ சர்வமங்களா நகர் சங்க நிர்வாகிகள், சிட்லபாக்கம் ரெய்சிங் உட்பட பலர் கலந்து கொண்டதில் […]