ஆடி வெள்ளி… மகாலக்ஷ்மி, ஆண்டாள் வழிபாடு; அக்கம்பக்கத்து பெண்களுக்கு புடவை,வளையல்!

வெள்ளிக்கிழமை என்பது எல்லா மாதத்திலுமே முக்கியத்துவம் வாய்ந்த நாள்தான். வெள்ளிக்கிழமையை சுக்கிரவாரம் என்பார்கள். சுக்கிர யோகம் கிடைக்க, வெள்ளிக்கிழமையில் மகாலக்ஷ்மியை வழிபடச் சொல்கின்றன ஞானநூல்கள்.ஆச்சார்யர்களும் வெள்ளிக்கிழமையில், மகாலக்ஷ்மியை வணங்கச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக, ஆடி மாத வெள்ளிக்கிழமையில், மறக்காமல் காலையும் மாலையும் விளக்கேற்றி, மகாலக்ஷ்மி காயத்ரீ அல்லது மகாலக்ஷ்மி நாமாவளிகளைச் சொல்லி ஏதேனும் இனிப்பு நைவேத்தியமாகப் படைக்கலாம். அம்பாளுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே அரளிப்பூ, செம்பருத்தி, ரோஜா முதலான மலர்களைச் சூட்டி வழிபடுங்கள்.கனகதாரா ஸ்தோத்திரம் […]

வாழ்வைச் செழிக்க வைக்கும் ஆனித் திருமஞ்சனம்

திருமஞ்சனம் என்பது தெய்வத்தை நீராட்டிக் குளிர்விக்கும் நிகழ்வாகும். ஆங்கில மாதம் ஜூன், ஜூலைக்கு இடைப்பட்டட காலத்திலும், தமிழ் மாதம் ஆனி உத்திர நட்சத்திரத்திலும், இந்த ஆனித் திருமஞ்சன விழா நடத்தப்படுகிறது.சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் ஆனித் திருமஞ்சன விழா மிகவும் பிரபலமானதாகும். நடராஜப் பெருமான் வருடத்தில் ஆனி – மார்கழி மாதத்தில் மட்டுமே வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த ஆனி உத்திரமே, ஆடல் வல்லானுக்கான விழாவாக ஆனித் திருமஞ்சனம் என்ற பெயரில் விமரிசையாகக் கொண்டாடப் […]

தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் ஏராளமானோர் பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர் கன்னியாகுமரி, வேதாரண்யத்தில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

முன்னோர்களின் சாபம் நீக்கும் தை அமாவாசை

கடற்கரையில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்கள், தங்கள் வீட்டில் இருந்து சுத்தமான நீரை எடுத்துக் கொண்டு செல்வதும், அதில் தர்ப்பணம் செய்வதும் நல்ல பலன்களைத் தரும்.அச்சோதை என்னும் தேவலோகப் பெண், நதிக்கரை ஓரத்தில் ஆயிரம் வருடம் தவம் செய்தாள். அவள் மரீசி மகரிஷியின் மகன்களான பித்ரு தேவதைகளை தரிசிக்க எண்ணி, கடுமையாக தவம் இருந்தாள். பித்ரு தேவதைகள் அவளுக்கு காட்சி கொடுத்து “உனக்கு என்ன வரம் வேண்டும்?” எனக் கேட்டனர். அப்பொழுது அந்த தேவ மங்கை, பித்ரு தேவதைகள் […]

கோமாதா வழிபாட்டால் விலகும் தோஷங்கள்

இந்துக்கள் பசுக்களை கடவுளுக்கு நிகராக வணங்குகின்றனர். கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும்.முன்னோருக்கு செய்ய வேண்டிய நீத்தார் கடன்களான திதி, கர்மா செய்யாமல் இருந்தால் ஏற்படும் பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். மேலும் பித்ரு தோஷங்களும் நீங்கும். பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் […]

நவக்கிரகங்கள் இல்லாத சிவாலயங்கள் பற்றி தெரியுமா?

மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாக போற்றப்படுகிறார்.படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கிய சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் காட்சியளிக்கிறார்.தமிழகத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரக சன்னதி இருக்கும்.சிவாலயங்களில் நவக்கிரகங்கள் இல்லை என்றால் அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது எங்கெல்லாம் சிவனை எமன் வழிபட்டுள்ளாரோ அங்குள்ள சிவன் ஆலயங்களில் நவக்கிரக சன்னதி இருக்காதாம்.அப்படி நவக்கிரக சன்னதி இல்லாத 11 சிவாலயங்கள் […]

பைரவருக்கு ஏன் நாய் வாகனம்

பைரவர் காவல் தெய்வமாக விளங்குவதால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார்.இந்த நாய் அவருக்குப் பின்புறம் குறுக்காகவும்,அவருக்கு இடது புறம் நேராகவும் நிற்கின்றது.சில கலைஞர்கள் இந்த நாய் பைரவரின் கரத்திலுள்ள வெட்டுண்ட தலையிலிருந்து வடியும் இரத்தத்தைச் சுவைப்பது போலவும் அமைத்துள்ளனர்.அபூர்வமாகச் சில தலங்களில் நான்கு நாய்களுடனும் பைரவர் அமைக்கப்பட்டுள்ளார்.இராமகிரி என்னும் தலத்தில் அன்பர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு பைரவர் சந்நதியில் நாய் உருவத்தைச் செய்து வைத்துள்ளனர்.இதனால் இங்கு நிறைய நாய் சிலைகள் இருக்கின்றன.பிள்ளைப்பேறு வேண்டி இக்கோவிலை வலம் […]

புரட்டாசி முதல் சனிக்கிழமை..விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை. புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லா விதமான துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகமாகும்.ஆடி வெள்ளிக்கிழமைக்கும், ஆவணி ஞாயிற்றுக்கிழமைக்கும் எந்த அளவுக்கு சிறப்புகள் உண்டோ அதை விட அதிக சிறப்புகள் கொண்டது புரட்டாசி சனிக்கிழமை ஆகும்.புரட்டாசி சனிக்கிழமைதான் சனி பகவான் அவதரித்தார். எனவே சனிக்கிழமை விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபட்டால் சனியால் ஏற்படும் பாதிப்புகள் வரவே வராது. சனிக்கிழமையன்று விரதம் இருந்து பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் கலந்த […]

கோகுலாஷ்டமி வழிபாடு

பொதுவாக குழந்தை கிருஷ்ணனுக்கு விருப்பமான பட்சணங்கள், வெண்ணெய், பால், திரட்டுப்பால், பழங்கள் ஆகியவற்றை வைத்து, கிருஷ்ணன் காலடி வரைந்து வழிபடுவார்கள். அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை,சமயோசித புத்தி ஆகியவற்றின் வடிவான கிருஷ்ணனை வழிபட்டு, அவர் காட்டிய கீதை வழி நடக்க முயற்சிப்பதே கோகுலாஷ்டமியின் சிறப்பு.இதனை “ஸ்ரீ ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, ராச லீலா, தகிஅண்டி ” என பல பெயர்களில், பல வடிவங்களில் மகிழ்கின்றனர்.கிருஷ்ணாவதாரத்தில் அஷ்டமி திதியில் ரோகினி நட்சத்திரத்தில் ஸ்ரீ கண்ணனாக அவதரித்த தினத்தை கோகுலாஷ்டமி என்று […]