செல்வம் அள்ளித்தரும் மகாளயம் விரதம்

புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களாக விரதம் இருந்து அமாவாசை அன்று நம் மூதாதையருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண்புகளையும் தரவல்லது.எனவே தினம் தினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட முடியாதவர்களும் இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வழிபட வேண்டும். வீட்டில் காலம் சென்ற மூதாதையரின் படம் இருக்குமானால் அதன் முன் இக்காலத்தில் தினம் தினம் ஏதாவது ஒரு சாதம் […]
புரட்டாசி முதல் சனிக்கிழமை.. விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்

புரட்டாசி முதல் சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லா விதமான துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகமாகும்.இந்த ஆண்டு புரட்டாசி மாதத்துக்கு செப்டம்பர் 21, செப்டம்பர் 28, அக்டோபர் 5, அக்டோபர் 12, ஆகிய தேதிகளில் 4 சனிக்கிழமை வருகிறது. இந்த 4 சனிக்கிழமைகளிலும் பெருமாளை வழிபட தவறாதீர்கள்.ஆடி வெள்ளிக்கிழமைக்கும், ஆவணி ஞாயிற்றுக் கிழமைக்கும் எந்த அளவுக்கு சிறப்புகள் உண்டோ அதை விட அதிக சிறப்புகள் கொண்டது புரட்டாசி சனிக்கிழமை ஆகும்.புரட்டாசி சனிக்கிழமைதான் சனி பகவான் அவதரித்தார். […]
புரட்டாசி மாத விரதங்கள்

புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இந்த மாதத்தில் பெருமாளுக்குரிய வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். பெருமாள் மட்டுமின்றி, அம்பாளுக்கு உரிய நவராத்திரி விரத நாளும், புரட்டாசி மாதத்தில்தான் வருகிறது. அதோடு முன்னோர்களை வழிபடும் ‘மகாளய அமாவாசை’, சிவபெருமானின் அருளை பெற்றுத் தரும் ‘கேதார கவுரி விரதம்’ என்று அனைத்து தெய்வங்களுக்குமான வழிபாட்டு மாதமாக புரட்டாசி மாதம் இருக்கிறது.புரட்டாசி மாதத்தில் கடைப் பிடிக்கப்படும் விரதங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.அமுக்தாபரண விரதம்புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை […]
ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்

இராமாயணத்தில் முக்கிய அங்கமாக திகழ்பவர் அனுமன் தான்.வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும்.அனுமனுக்கு வெண்ணெய்காப்பை சார்த்தி வழிபடுவதனால் கஷஷ்டங்களும் வெண்ணெய் உருகுவது போல் உருகி விடும்.தாம்பூலம் என்னும் வெற்றிலையை மாலையாக கட்டி அணிவித்து சனிக்கிழமை அனுமத் கவசம் படித்தால் சத்ரு பயம் நீங்கி நலம் பெறலாம்.அனுமனுக்கு திராட்சைப்பழம் பிரியமான நிவேதனப் பொருள். வெற்றி கிடைத்திட திராட்சைப் பழம் படைத்து வழிபட வேண்டும்.அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்து […]
சர்க்கரை நோய் தீர்க்கும் பரிகார தலம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி என்ற ஊரில் அமைந்துள்ளது வெண்ணி கரும்பேஸ்வரர் கோவில். இத்தலத்தின் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.நாயன்மார்களில் முக்கியமானவர்களான அப்பர், சம்பந்தர் உள்ளிட்டோர் பாடியுள்ள இத்தலம், சர்க்கரை நோய் தீர்க்கும் பரிகார தலமாக விளங்குகிறது.சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கோவிலில் வெண்ணிகரும்பேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதுடன், சர்க்கரை மற்றும் ரவையை சேர்த்து கோவில் பிரகாரத்தில் எறும்புக்கு உணவாக இடுகிறார்கள். இந்த உணவை பிரகாரத்தில் உள்ள எறும்புகள் உண்பதால் சர்க்கரை நோய் பாதிப்பு குறைகிறது […]
அமாவாசை அன்று எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்?

அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து வடகிழக்கு திசையில் வைத்து தெற்கு பார்த்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி […]
நலம் தருபவர் நவக்கிரக கணபதியே!!!

முழுமுதற் கடவுள் கணபதி நவக்கிரகங்களை தன்னுள் அடக்கி ஆள்பவர். பிள்ளையாரின் நெற்றியில் சூரியன் இருக்கிறது. தலை உச்சியில் குரு, அடி வயிற்றில் சந்திரன், வலது மேற்கையில் சனிபகவான், வலது கீழ்க்கையில் புதன், இடது மேற்கையில் ராகு, இடது கீழ்க்கையில் சுக்கிரன் இப்படி நவக்கிரகங்களும் பிள்ளையாரிடம் இருக்கின்றன. கணபதியே நவக்கிரக வடிவில் உள்ளார் என்பதை உணர்ந்து அதற்குரிய துதிகளைச்சொல்லி வணங்கினால் இடையூறுகள் நிச்சயம் விலகும். நவக்கிரகத்துக்கு உகந்த கணபதி துதியைச் சொல்லி வணங்கினால் துயரங்கள் நீங்கி நலம் பல […]
சதுர்த்தி விரதத்தின் மகிமைகள்…

ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும். துவாபர பாகத்தில் மூஞ்சுறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார்.வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு […]
வினைகளை தீர்க்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம்

ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின் வடிவத்தை கொண்டவர் விநாயகப்பெருமான். நமது நாட்டில் மிக பழமையான காலம் தொட்டே விநாயகர் வழிபாடு முறை இருந்து வருகிறது. நமது வினைகள் அனைத்தையும் விலக்குபவர் விநாயகர்.அப்படி வேண்டும் பக்தர்களின் அனைத்து வினைகளையும் தீர்க்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம். சுமார் 1600 ஆண்டுகள் பழமையான இக்கோவில் ஒரு “குடைவரை” கோவிலாகும். இந்த வகை கோவில்களைக் கட்டுவதில் சிறந்தவர்களாக விளங்கியவர்கள் “பல்லவ” மன்னர்கள். அவர்கள் வழி வந்த […]
உங்கள் கோலங்களுக்கு ஈஸி டிப்ஸ்

· பெயிண்ட் கோலம் வண்ணமாக போடும் போது ஒரு கலர் காய்ந்த பின் அடுத்த கலரைத் தீட்ட வேண்டும். இல்லாவிட்டால் நாம் கலருக்குச் சேர்க்கும் டர்பன்டைன் (அ) கெரோசின் வழிந்து முதலில் போட்ட கலரையும் வீணாக்கிவிடும்.· வண்ணக்கோலம் வாசலில் இடுபவர்கள் சலித்த நைஸ் மணலைச் சேர்த்துப் போடலாம். வண்ணப்பொடியை அப்படியே உபயோகித்தால் நைசாக இருப்பதினால் காற்றில் பறந்து கலர் குழம்பிவிடும்.· உங்கள் பழைய வளையல்களை ரங்கோலி கோலம் டிசைன்களுக்கு பயன்படுத்தலாம்.· இரண்டு வண்ணங்களை சரியான அளவில் கலந்தால், […]