அரையாண்டு விடுமுறை: பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது – கல்வித் துறை எச்சரிக்கை

அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 23-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. அரையாண்டு விடுமுறைக்கு பிறகு அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. இந்த இடைப்பட்ட நாட்களில் சில தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஒரு சில குறிப்பிட்ட வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக புகார்கள் […]

சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தனியார் பள்ளியில் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை ராயப்பேட்டை போலீஸ் தேடி வருகிறது.

கரூர் விஜய் கட்சி தவெக நிர்வாகி அதிரடி கைது, பள்ளி ஆசிரியை பெயரில் கார் வாங்கி மோசடி

கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி கலப்பு காலணியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் டோமினிக் பிரபாகரன் என்பவரது மனைவி சங்கீதா. இவர் குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் குளித்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது; எனது கணவர் டோமினிக் பிரபாகரன் முன்னாள் ராணுவ வீரர். இவர் கடந்த ஆண்டு திருச்சி அருகே திருவரம்பூரில் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இவரது […]

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில்

வரும் 7 – 11ம் தேதி வரை ‘ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்‌ஷ்த் பாரத்’ போன்ற பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர், ஜி.கே.எம். காலனி 12&வது தெருவில்

பெருநகர சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்து, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு புத்தகப்பை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகு இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.பி.வில்சன், திரு.கலாநிதி வீராசாமி, திரு.ஆர்.கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தாயகம் கவி, திரு. ஜோசப் சாமுவேல், துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் […]

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர், ஜி.கே.எம். காலனி 12&வது தெருவில்

பெருநகர சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு சிங்கார சென்னை 2.0 நிதியின் கீழ் 2 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட தரைத்தளம் மற்றும் முதல் தளம், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பி.வில்சன் அவர்களின் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டாம் தளம், என மொத்தம் 4 கோடியே 23 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை திறந்து வைததார். இந்நிகழ்வின்போது,மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் […]

மாணவர்கள் நலன் கருதி காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அமைச்சருக்கு கோரிக்கை

மாணவர்களுக்கு அக்.2ம் தேதி வரை, ஐந்து நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்.7ம் தேதிக்கு பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை

தாழம்பூர் அருகே பள்ளி மாணவி கற்பழிப்பு 3 பேர் கைது

தாழம்பூர் அருகே 11 வகுப்பு பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலத்காரம், 2 சிறார் உள்ளிட்ட 3 பேர் கைது தாழம்பூர் அடுத்த மேலக்கோட்டையூரில் திருச்சியை சேர்ந்த குடும்பம் 4 ஆண்டுகளாக வசித்து வந்தது. அந்த குடும்பத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி அருகில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18ம் தேதி மாலை பள்ளி முடித்து வீடு சென்ற நிலையில் இயற்கை உபாதை கழிக்க திறந்தவெளி […]

சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

ஜெ.ஜெ. நகர் டிவிஎஸ் நிழற்சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திறன் மதிப்பீட்டுத் தேர்வு: அக்.7 முதல் 10 வரை நடைபெறும்

சென்னை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு அக்டோபர் 7-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்; தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான மாநில மதிப்பீட்டுப் புலம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அதன்படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் […]