புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் விவரம்👇🏻

கோவி.செழியன் – உயர்கல்வித்துறை. செந்தில் பாலாஜியும் – மின்சாரத்துறை. நாசர் – சிறுபான்மையினர் நலத்துறை. ராஜேந்திரன் – சுற்றுலா சுற்றுலாத்துறை
பேரறிஞர் அண்ணாவின் 55- வது நினைவு நாளையொட்டி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அண்ணா தி. மு. க சார்பில், மாவட்ட கழகச் செயலாளர் சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் தலைமையில், தாம்பரம் மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுரு சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

முன்னாள் அமைச்சர் டி. கே. எம். சின்னையா மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில் திமுக அரசை கண்டித்து சிட்லபாக்கத்தில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடந்தது

இதில் அதிமுக தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால். மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி .கே .எம் சின்னையா, பகுதி செயலாளர் இரா.மோகன், மாமன்ற உறுப்பினர் சுபாஷினி புருஷோத்தமன், இளைஞர் அணி செயலாளர் புருஷோத்தமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி கே.பழனிசாமி சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன், முன்னாள் எம்பி. நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
சமூகப் நலப் பணிகளை ஆற்றி வரும் மதுரை ராஜேந்திரனுக்கு முதல்வர் பாராட்டு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (17.8.2023) மதுரையில், பல்வேறு சமூகப் நலப் பணிகளை ஆற்றி வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் புரிந்து வரும் ராஜேந்திரன் அழைத்து சிறப்பித்து, மதுரை மாநகராட்சி, வி.க.மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை 1கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்து தந்தமைக்காகவும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், […]