சென்னை ஐகோர்டு வளாகத்தில் உள்ளஎஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் மழைவெள்ளம் சூழ்ந்து நின்ற காட்சி
ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடந்தன
வேளச்சேரி நெடுஞ்சாலையில் பள்ளிக்கரணை அருகே சாலைகளில் ஆறுபோல், பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
வியாசர்பாடி ஜீவா ரெயில்வே சுரங்க பாதையில்குளம் போல் தேங்கி நிற்கும் மழை வெள்ளம்
சென்னை வாலாஜாசாலை முழுவதும் மழைநீர் சூழ்ந்து இருந்த காட்சி
ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் மழை வெள்ளம் புகுந்துள்ளதை படத்தில் காணலாம்
சென்னையில் நேற்று கொட்டித்தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. கோயம்பேடு புறநகர்பஸ் நிலைய நுழைவுவாயில் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரையும், அதில் பஸ் ஒன்று தத்தளித்து செல்வதையும் படத்தில் காணலாம்.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு..!!

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
பள்ளிகளுக்கு விடுமுறை

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் டிச.4 ம் தேதி விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல்