சென்னை தாம்பரம் அருகே நேற்று ஒரே இரவில் அடுத்தடுத்து அரங்கேறிய 3 கொலைச்சம்பவங்கள் – குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டிய காவல்துறை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழிப்பது எப்போது ?
சென்னை தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர், செங்கல் சூளை தொழிலாளி மற்றும் குரோம்பேட்டையைச் சேர்ந்த நபர் ஒருவர் என நேற்று ஒரே இரவில் மூன்று பேர் அடுத்தடுத்து கொலை, நுங்கம்பாக்கத்தில் திரைப்பட புகைப்பட கலைஞர் ஒருவரை சரமாரியாக வெட்டிவிட்டு செல்போன் பறிப்பு என வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தின் தலைநகர் மட்டுமல்லாது எங்கு பார்த்தாலும் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, திருட்டு, போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் […]
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜா உடலை பெற உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்

தீபக் ராஜாவை வெட்டிக் கொன்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் உடலை பெற உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ரவுடி தீபக் ராஜா உடல் 7 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் பெற உள்ளனர்.
நெல்லையில் ரவுடி தீபக் ராஜா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்..
சிட்லபாக்கத்தில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை

தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் வெட்டி கொலை, மூன்று பேர் கைது தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயா (19).இவர் பள்ளிகரனையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்துக்கொண்டு ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் நேற்று சிட்லபாக்கம், சேது நாராயணன் தெருவில் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து தகராறில் […]
சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து – பேரன் கைது

நாமக்கல்லில் சிக்கன் ரைசில் பூச்சிமருந்து கலந்துகொடுத்து தாத்தாவைக் கொன்ற பேரன் கைது அ நாடு கல்லூரி மாணவர் பகவதி வாங்கிக்கொடுத்த சிக்கன் ரைஸை சாப்பிட்ட தாத்தா சண்முகம் உயிரிழப்பு; சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பகவதியின் தாய்க்கும் உடல் நலக்குறைவு; சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்ததற்கான காரணம் குறித்து பகவதியிடம் போலீஸ் விசாரணை
மனைவி கழுத்தை நெரித்து கொன்ற மத போதகர் கைது

சென்னை அருகே பொன்மாரில் மதபோதகர் அவர் மனைவியின் கழுத்து நெரித்து கொலைசெய்த நிலையில் உடல் நிலை பாதித்ததாக கூறி இறுதி சடங்கு செய்யமுயன்றபோது பெண் வீட்டார் சாவில் சந்தேகம் என கூறியதால் பிடிபட்டார். திருமணத்திற்கு முன்பு ஏற்பட்ட காதல் குறித்து பேசியபோது கணவன் மனைவி இருவருக்கு சண்டை ஏற்பட்டுள்ளது. தாழம்பூரை அடுத்த பொன்மாரில் உள்ள அட்வெண்ட் கிறிஸ்தவ திருச்சபையில் துனை மதபோதகராக உள்ளவர் விமல்ராஜ்(35) இவர் மனைவி வைஷாலி(33) மும்பையில் பூர்விகமாக கொண்ட வைஷாலிக்கு தமிழ் குடும்பம் […]
மனைவியைக் கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தாம்பரம் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகர் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வரபிரசாதம் (60) இவர் கட்டிட வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி விசுவாசம் (50) இவரும் வேறு பகுதியில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். மனைவி விசுவாசம் காலையில் வேலைக்கு சென்று மாலை நேரத்தில் வீட்டிற்க்கு வராமல் இரவு நேரத்தில் வீட்டிற்க்கு வந்ததால் […]
தாம்பரத்தில் லாரி டிரைவர் படுகொலை சிறையிலிருந்து வந்த கொலையாளி நடத்திய பயங்கரம்

தாம்பரம் அருகே ஏற்கனவே கொலை வழக்கில் சிறைக்கு சென்ற நபர் மீண்டும் கொலை செய்து காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்துவிட்டு தப்பி சென்றவரை போலீசார் கைது செய்தனர். சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியை சேர்ந்தவர் வினோத் நேற்று இரவு தன்னுடன் அறையில் தங்கியிருக்கும் லாரி ஓட்டுனர் குமார் என்பவருடன் நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்க்கு வந்துள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வினோத் வீட்டின் […]
சாம்பாருக்காக கொலை பரபரப்பு வீடியோ வைரல்

பம்மல் பிரதான சாலையில் தனியார் சைவ ஓட்டலில் கூடுதல் சாம்பார் கேட்ட தந்தை மகன் ஓட்டல் ஊழியரை தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது. ஓட்டலில் இட்லி வாங்க வந்த தந்தை சங்கர், மகன் அருண்குமார் கூடுதல் சாம்பார் கேட்டனர். அதில் பிரச்சினை ஏற்பட்டது. சாம்பார் வழங்கப்பட்ட நிலையில் வாசலில் காவலாளியை முதலில் அருண்குமார் கண்ணத்தில் அடிக்க அதனை மற்றொரு ஊழியர் தட்டிகேட்க இருவரிடமும் தந்தை மகன் தகறாறு செய்த நிலையில் அதனை தடுக்க வந்த ஓட்டல் மேற்பார்வையாளர் அருணை […]
கூடுதல் சாம்பார் தராததால் ஹோட்டல் ஊழியரை அடித்து கொலை தந்தை மகன் கைது

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் (அடையார் ஆனந்த பவன்) பிரபல தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு தஞ்சாவூரை சேர்ந்த அருண்(30) என்பவர் சூப்பர்வைசராக பணியில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ஹோட்டல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது அனகாபுத்தூர், லெட்சுமி தெரு, பாரி நகர், கிராண்ட் பிளாட்டில் வசித்து வரும் சங்கர் (55) மற்றும் அவரது மகன் அருண்குமார்(30) ஆகிய இருவரும் சாப்பிட இட்லி பார்சல் வாங்க […]