சிட்லபாக்கம் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்

இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் எல்லோருக்கும் எல்லாம் என்னும் சிறந்த சித்தாந்தத்தில் செயல்பட்டு வரும் நம் சீர்மிகு மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் காலை உணவுத் திட்டம் இன்று தமிழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 சிட்லபாக்கம் பகுதிக்கு உட்பட்ட மாநகர தொடக்கப்பள்ளி சிட்லபாக்கம் 2வது பிரதான சாலையில் சமையல் கூடம் திறப்பு விழா காலை 8:00 மணி மற்றும் அம்பேத்கர் […]
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

இன்று (25.08.2023) முதலமைச்சர் மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சியில் துணைமேயர் கோ.காமராஜ், பம்மல் மண்டலத்திற்குட்பட்ட திருநீர்மலை பகுதியில் மாநகராட்சி துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கி, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

இன்று (25.08.2023) முதலமைச்சர் மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மாடம்பாக்கம், மாநகராட்சி துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கி, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்நிகழ்ச்சியில் மண்டலக்குழுத் தவைவர்கள் சு.இந்திரன், து.காமராஜ் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.