சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய வழக்கில், பாடகர் வேல்முருகன் கைது

வளசரவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்த நிலையில் மதுபோதையில் வாக்குவாதம் மெட்ரோ ரயில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக புகார் – மெட்ரோ ரயில் உதவி மேலாளர் வடிவேலு காயம் வேல்முருகனை கைது செய்து, காவல்நிலைய ஜாமினில் விடுவித்த விருகம்பாக்கம் போலீசார் ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் காரணமாக OMR சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

அதன்படி, வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள், துர்யா ஓட்டல் முன் U டர்ன் செய்து துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் செல்லலாம். அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள், உலக வர்த்தக மையத்தின் முன் U டர்ன் செய்து அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வேளச்சேரி செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றம் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணி நடப்பதால் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

மெட்ரோ கட்டுமானப் பணிக்காக மார்ச் 9, 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் என நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றம். சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியாக திருப்பிவிடப்படும். ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் எம்ஜிஆர் சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் செல்லலாம். அமைந்தகரை செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட், நெல்சன் மாணிக்கம் சாலை வழியை பயன்படுத்தலாம் […]

சென்னை பூவிருந்தவல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்

பரந்தூருக்கு மெட்ரோ ரயில் – திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர். சென்னை பூவிருந்தவல்லி முதல் பரந்தூர் வரை 50 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர். பூவிருந்தவல்லியிலிருந்து திருமழிசை வழியாக பரந்தூர் வரை மெட்ரோ ரயில் இயக்க விரிவான திட்ட அறிக்கை கோரியுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்!

சென்னையில் ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ ரயில் பயணம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு வரும் டிச.3ம் தேதி டிஜிட்டல் க்யூ.ஆர் பயணச்சீட்டு பயணிகளுக்கு 5 ரூபாய் கட்டணத்தில் பயணம். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூ.ஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்கு பொருந்தாது.

சென்னை மெட்ரோவில் 85.50 லட்சம் பேர் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோவில் கடந்தாண்டு மட்டும் 85.50 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் 1.13 லட்சம் பயணிகள் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக அக்.,20ல் 3.60 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை

ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 20, 21 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரயில் சேவை இரவு 8 மணி முதல் 10 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இரு வழித்தடங்களிலும் ரயில்கள் இயக்கப்படும்.

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஒரு மாதத்தில் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி காலி செய்ய வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சமூகநீதி பாதுகாவலர்கள் எனக் கூறும் அரசியல் கட்சிகள், மக்கள் விருப்பத்துக்கு கௌரவம் வழங்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, ஒதுக்கப்பட்ட நிலத்தை ஒரு மாதத்தில் காலி செய்ய வேண்டும். ஒரு மாதத்தில் காலி செய்து கொடுக்காவிட்டால், திமுக எம்.பியை அப்புறப்படுத்தி நிலத்தை மீட்க வேண்டும்.

ஆகஸ்ட் மாதத்தில் 85.89 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை இல்லாத வகையில் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 85.89 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் நம்பகத்தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்தவகையில் 2023 ஜூலை மாதத்தைவிட ஆகஸ்ட் மாதத்தில் 3,36,215 பயணிகள் கூடுதலாக பயணித்துள்ளனர்.