திருமண பொன்விழா .தாயாரிடம் ஆசி பெற்ற ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் துர்கா ஸ்டாலினை திருமணம் செய்து 50 ஆண்டுகள் ஆகி உள்ளது இந்த பொண்ணு விழாவை ஒட்டி அவர் இன்று கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் பின்னல் தன் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.எதிர்பார்ப்பு இல்லாமலும் விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் மண வாழ்க்கையின் சிறப்பு என்று அவர் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளார்
பெண்ணின் திருமண வயதை 21-ஆக உயர்த்த நாடாளுமன்றத்தில் விவாதம்

இந்தியாவில் ஆண்களை போலவே பெண்களின் திருமண வயதையும் 21-ஆக உயர்த்துவது குறித்து, வரும் 22-ந் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற நிலைக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது. இரு பாலருக்கும் திருமண வயது 21-ஆக உயர்த்தி கடந்த 2021-ம் ஆண்டு தாக்கல் செய்த மசோதா காலாவதியாகிவிட்ட நிலையில், தற்போது நாடாளுமன்ற நிலைக்குழு விவாதிக்க உள்ளது.
ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு தாய்லாந்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம்

ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்று. ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி அளித்த 3-வது நாடு தாய்லாந்து.
புதுமணத் தம்பதிகளான காங்கிரஸ் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணு மற்றும் நடிகை மேகா ஆகாஷ் ஆகிய இருவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து, அவரது ஆசி பெற்றுள்ளனர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னையில் நடைபெற்ற நடிகர் திரு. சின்னி ஜெயந்த் அவர்களின்மகன் திரு. சுருதன்ஜெய், இ.ஆஃப., – மனஸ்வினி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு

மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் ஆகியோர் உடனிருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில், நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி & நிகோலாய் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு

மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உள்ளனர்.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் அவர்களின் மகன் கோ.ப.அன்பழகன் அவர்கள் முதலமைச்சர் அவர்களை சந்தித்து தனது மகன் திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நடிகர்கள் சரத்குமார் – ராதிகா தம்பதியினர் தங்கள் மகள் வரலட்சுமி திருமணத்திற்கு பத்திரிகை தந்தனர்
ரூ.1,000 கோடி செலவில் நடைபெறும் முகேஷ் அம்பானி மகன் திருமணம் : ஜாம்நகரை சுற்றியுள்ள 51 ஆயிரம் பேருக்கு விருந்து

குஜராத்: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமணம் ரூ.1,000 கோடி செலவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் இந்த திருமணத்திற்கு முந்தைய விழாவில் 2500 வகை உணவுடன் தடபுட விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் உலக பணக்காரருமான முகேஷ் அம்பானி,நீட்டா அம்பானியின் 2வது மகன் ஆனந்த் அம்பானி இவருக்கும் என் கோர் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மகள் ராதிகா மெர்சென்ட்டிற்கும் வருகிற ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற […]
தமிழகம் அதிகாலை திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண்ணை தவிக்கவிட்டு காதலியை தேடி சென்ற மாப்பிள்ளை: நள்ளிரவில் போன் செய்து கர்ப்பமாக இருப்பதாக கூறியதால் மண்டபத்தில் இருந்து ஓட்டம்
சேலம்: சென்னை புதுபெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் (எ) வெங்கடாசி (29) என்பவருக்கும், சேலத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த மாதம் இறுதி வாரத்தில் திருமணம் நடத்த பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டிருந்தது. சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மண்டபத்தில் திருமண வரவேற்பு நடந்த நிலையில் விடிந்தால் திருமணம் என்ற நிலையில் மாப்பிள்ளை திடீரென தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த திருமண வீட்டார் எல்லா இடங்களிலும் தேடிய நிலையில் மாப்பிள்ளை, அதிகாலை 5 மணியளவில் வேட்டி பனியனுடன் அக்குளுக்குள் சட்டையை மடக்கி […]