தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸை அறிவித்துள்ளது தமிழக அரசு. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400, அதிகபட்சம் ரூ.16,800-ஐ போனஸ் ஆக பெறுவர் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னையில் இதுவரை 100 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம் – சென்னை மாநகராட்சி தகவல்.

பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் நேற்று காலை முதல் ஈடுபட்டுள்ள மாநகராட்சி பணியாளர்கள் இதுவரை 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் இந்த பட்டாசுக் கழிவுகள் அகற்றும் பணி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் என்றும் தகவல் தெரிவித்த சென்னை மாநகராட்சி அகற்றப்பட்ட பட்டாசுக் கழிவுகள் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தொழிற்சாலையில் அறிவியல் பூர்வமாக அழிக்கப்படும் = மாநகராட்சி அதிகாரிகள்
தீபாவளி பண்டிகை- சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு

அதிகளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக மொத்தம் 19 வழக்குகள் பதிவு அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவு – காவல்துறை தகவல்.
நேற்று இரவில் இருந்தே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருவதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது

சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 100 முதல் 200 வரை பதிவாகி உள்ளது. கும்மிடிப்பூண்டி 230, பெருங்குடி 169, அரும்பாக்கம் 134, வேலூர் 123, ராயபுரம் 121, கொடுங்கையூர் 112, கடலூர் 112, மணலியில் 109 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளது.
தீபாவளியை ஒட்டி இந்தியா முழுவதும் ரூ.30,000 கோடி மதிப்புக்கு தங்கம், வெள்ளி விற்பனையாகி உள்ளது

தீபாவளியை ஒட்டி இந்தியா முழுவதும் ரூ.30,000 கோடி மதிப்புக்கு தங்கம், வெள்ளி விற்பனையாகி உள்ளதாக வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. 41 டன் தங்கம், 400 டன் வெள்ளி விற்பனையாகி உள்ளதாக வணிகர் கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு தங்கம் விற்பனை 20% அதிகரிக்க வாய்ப்பு என நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி 3 லட்சத்து 66 ஆயிரத்து 80 பேர் 2 நாட்களில் சொந்த ஊர்களுக்கு பயணம் – போக்குவரத்துத் துறை

வழக்கமான பேருந்துகளுடன் சேர்த்து இதுவரை 6,656 பேருந்துகள் பயணிகளின் வசதிக்காக இயக்கம். வரும் நாட்களில் பயணம் செய்ய 2 லட்சத்து 38 ஆயிரத்து 598 பேர் முன்பதிவு – போக்குவரத்து கழகம் தகவல்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட் டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்தை எளிதாக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் துறையால் ஜிஎஸ்டி சாலை – சரவணா ஸ்டோர்ஸ் சந்திப்பு மற்றும் ஜிஎஸ்டி சாலை பல்லாவரம் மண்டல அலுவலக சந்திப்புகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, 9.11.2023 முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.புதிய போக்குவரத்து மாற்றங்கள் பின்வருமாறு:
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நெரிசல்மிகு மாலை நேரத்தில் மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு

தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி நவ. 9, 10, 11 ஆகிய தேதிகளில் மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிப்பு இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு நாளை காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கம் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு 10ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
ஞாயிற்றுக்கிழமை தீபாவளி தினம் கொண்டாடப்படுவதால் மறுநாளான திங்கட்கிழமை விடுமுறை அளிக்கலாமா..? என தமிழ்நாடு அரசு ஆலோசனை
