செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் மூலதன கட்டுமான செலவு மட்டுமே வசூல்”

ஆர்.டி.ஐ மூலம் வெளி வந்த அதிர்ச்சி தகவல் “19 ஆண்டுகள் 5 மாதங்களில்57.6% மூலதன கட்டுமான செலவு மட்டுமே வசூல்” “சாலை அமைக்க மொத்த மூலதன கட்டுமான செலவு ரூ.1036.91 கோடி” “2005 ஏப்.முதல் 2024 வரை ரூ.596.80 கோடி மட்டுமே சுங்க கட்டணமாக வசூல்” “மூலதன செலவில் மீட்க வேண்டிய தொகை 440.11 கோடி ரூபாயாக உள்ளது”
29.11.24 தற்போதைய நிலையில் பெங்கல் புயல் 10 கி.மீ வேகத்தில் நகருகிறது

புயலின் வேகம் நாகையிலிருந்து 290 கி.மீ சென்னையிலிருந்து 340 கி.மீ புதுச்சேரியில் இருந்து 320 கி.மீ இலங்கை திரிகோணமலையில் இருந்து 290 கி.மீ ஆகிய தொலைவில் புயல் நகருகிறது இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தென்மேற்கு வங்க கடலில் ஃபெங்கல் புயல் உருவானது இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது தென்மேற்கு வங்க கடலில் ஃபெங்கல் புயல் உருவானது இந்திய வானிலை […]
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நாளை (நவ.30) அதி கனமழைக்கான ரெட் அலர்ட்-வானிலை ஆய்வு மையம். சென்னை முதல் காரைக்கால் வரை இன்று, மணிக்கு 70 கி.மீ வேகம் வரை தரைக்காற்று வீசக்கூடும். நாளை வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 90 கி.மீ வரை சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் கணிப்பு.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 4 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு!

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்பட மொத்தம் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு
செங்கல்பட்டில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

அடுத்தடுத்து வாகனங்கள் சரமாரியாக ஜிஎஸ்டி சாலையில் மோதியதால் பரபரப்பு. செங்கல்பட்டு அருகே சென்னை நோக்கி வந்த லாரி, ஆம்னி பேருந்து, அரசுப் பேருந்து மோதியது. ஒன்றன்பின் ஒன்று மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி, பலர் படுகாயமடைந்தனர்.
செங்கல்பட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து காயமடைந்த 2 சிறுமிகள் இன்று உயிரிழப்பு
செங்கல்பட்டில் சதாம் என்பவர் வீட்டில் நேற்று எரிவாயு சிலிண்டர் வெடித்து காயமடைந்த 2 குழந்தைகள் இன்று உயிரிழந்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரஜியா பர்வீன்(8), ஆப்தாப்(2) உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட சரக்கு ரயிலால் தண்டவாளம் உடைந்ததால், புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரம்

9 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், முதற் கட்டமாக நான்கு பெட்டிகளை அகற்றம். துண்டு துண்டுகளாக உடைந்த தண்டவாளத்தை அகற்றிவிட்டு புதிய தண்டவாளத்தை அமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது

10-க்கும் மேற்ப்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. அதை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்களும் தாமதம்
செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால், சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கம்

2 மணிநேரமாக செங்கல்பட்டில் ரயில்கள் இல்லாததால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்வோர் தவிப்பு