சந்திரயான்-3 எடுத்ததாக போலி படங்கள்

புதுடில்லி: நிலவில் ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம், நிலவில் தரையிறங்கி பிறகு அங்கிருந்து பூமியை புகைப்படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற கோணத்தில் ‘செயற்கை நுண்ணறிவு’ படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்கள் வைரலாகின. நிலவில் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது 5வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பூமியில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு மாற்றப்பட இருக்கிறது. […]
புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: 41 நாளுக்கு பிறகு நிலவை சென்றடைகிறது.

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் நேற்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடங்களில், திட்டமிட்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 41 நாள் பயணத்துக்கு பிறகு, ஆகஸ்ட் மாத இறுதியில் நிலவை சந்திரயான்-3 சென்றடைகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை அனுப்பியது. அது நிலவின் தரைப்பகுதியில் இருந்து 100 கி.மீ. உயரத்தில் […]
சந்திராயன் -3க்கு பெருமை சேர்க்கும் தமிழர்

விழுப்புரம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், விழுப்புரத்தை சேர்ந்தவர், ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார். விழுப்புரத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் வீர முத்துவேல், 42; விஞ்ஞானி. இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயக்கப்போகும் திட்ட இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார். இவரது தந்தை பழனிவேல், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். தற்போது, எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்க, மத்திய செயல் தலைவராக உள்ளார். தாய் ரமணி, குடும்பத் தலைவி. இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் வசிக்கின்றனர். விழுப்புரத்தில் உள்ள […]