அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், விக்கிரவாண்டி டோல்கேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

குரோம்பேட்டை ஜிஎஸ்டி ரோட்டில் உள்ள எஸ்கலேட்டர் பழுதாகி உள்ளது. கடந்த ஒரு மாதமாக அது பழுது பார்க்கப்பட வில்லை. நெடுஞ்சாலைத்துறை பழுது பார்க்காததை கண்டித்து குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அதன் தலைவர் வி. சந்தானம், போலீஸ் கிருஷ்ணமூர்த்தி, வணிகர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன், அர்கீஸ்வரர் காலனி நலச் சங்கத்தின் செயலாளர் தன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர்.
தாம்பரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து செம்பாக்கம் பேரூந்து நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிட்லபாக்கம்-, செம்பாக்கம் பகுதி செயலாளர் மோகன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, முன்னாள் எம்.எல்.ஏ ப.தன்சிங், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சேலையூர்.ஜி.சங்கர், சாந்தி புருஷோதமன், மாடம்பாக்கம் தேவேந்திரன், உள்ளிட்ட 1000க்கும் மேற்படட் அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
அதிமுக சார்பில் திருச்சியில் ஆகஸ்ட் 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திருச்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும்; பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரியும், உயர்த்தப்பட்டுள்ள வரிகளை திரும்பப்பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க. ஒன்றிய அரசுக்கு கண்டனம்

வருகிற ஜூலை 27, சனிக்கிழமை, காலை 10.00 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தாம்பரம் ஏரிகளில் கழிவு நீர் அதிமுக குற்றச்சாட்டு

தாம்பரம் ஏரிகள் கழிவு நீர் ஏரிகளாக மாறி உள்ளன என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் சண்முகம் சாலையில் நடந்த போராட்டத்திற்குமாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். திமுக அரசை கண்டிக்கும் வகையில் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களும் அதிமுகவினரும் கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்கள். பகுதி செயலாளர் எல்லார் செழியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி கே எம் […]
சிட்லபாக்கத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3ல் தி.மு.க அரசின் நிர்வாகத்தை கண்டித்து சிட்லபாக்கம், -செம்பாக்கம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிட்லபாக்கம் வரதராஜா திரையரங்கம் அருகில் நடந்த போராட்டத்தில் மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டனர். இந்த ஆர்பாட்டதில் அதிமுக சிட்லபாக்கம்-, செம்பாக்கம் பகுதி செயலாளர் மோகன், அதிமுக எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, மாவட்டக் துணைச் செயலாளர் ப.தன்சிங், மாமன்ற உறுப்பினர்கள் சுபாஷினி புருஷோத்தமன், […]
காங்கிரசை கண்டித்து குரோம்பேட்டையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்திய மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பாஜக சார்பில் இந்தியர்களை இழிவாக பேசிய காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடாவை கண்டித்து மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் சாம் பிட்ரோடாவை கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் […]
ஜார்ஜியாவில் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்பாட்டம் நடத்தியவர்கள் மீது, பாதுகாப்பு படையினர் கண்ணீர்புகை குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது

15 ஆண்டாக நீடிக்கும் ராதாநகர் சுரங்கபாதை பணி

குரோம்பேட்டை ராதா நகரில் 2 மற்றும் 3 வது மண்டல குடியிருப்போர் நல வாழ்வு சங்கங்களின் இணைப்பு மையம் சார்பில் ராதா நகரில் தெருமுனை கூட்டம் நடந்தது.செயலாளர் முருகையன் பொருளாளர் அரசி, நாசே சீனிவாசன், வியாபாரிகள் சங்கம் பி.ராம கிருஷ்ணன், குரோம் பேட்டை நாசர், பி.பழனி மற்றும் நலச்சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.அப்போது வைஷ்ணவா கல்லூரி அருகே கனரக வாகனங்கள் செல்லும் வகையில் இருவழி சுரங்க பாதை அமைக்க மீண்டும் வலியுறுத்தப்பட்டது.சாலைகளில் ஆடு, மாடுகள் […]