சேலையூர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு சீர்வரிசை கொடுத்து மாணவர்கள் பிரியாவிடை

சேலையூரில் தாம்பரம் மாநகராட்சி அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. 34 ஆண்டுகளாக செயல்படும் இந்த பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக தலைமை ஆசிரியராக எம்.ஆனந்தபாபு என்பவர் பொறுப்பேற்றார். சேலையூர் ஊர் பிரமுகர்கள், பெற்றோர் ஆசிரியர்கழகத்துடன் இணைந்து பள்ளியின் தரம் உயரவும், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படவும் பாடுப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரின் அரசுப் பள்ளி ஆசிரியராக துவங்கி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இந்த தகவல் அறிந்து பெற்றோர் […]
கல் குட்டையில் குளிக்க சென்றவர்கள் வாகனம் மரத்தில் மோதி இரண்டு பேர் பலி

தாம்பரம் அடுத்த சோமங்கலத்தை சேர்ந்தவர் விஜ்ய்26) இவருடன் கூலி வேலை செய்யும் ரமேஷ்(16) இருவரும் இன்று அங்குள்ள கல் குட்டையில் குளிக்க (பல்சர்-220) இருசக்கர வாகனத்தில் கிஷ்கிந் சாலையில் சென்றனர். அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் திடிரென கட்டுப்பாடை இழந்து சாலையோரம் உள்ள காப்புகாட்டில் புகுந்து மரத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜய், ரமேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்கிறார்கள்.
வேங்கைவாசல் ஊராட்சியில் மரக்கன்று வழங்கும் விழா

தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்துறை சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கலந்துக்கொண்ட வேங்கைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் பொதுமக்களுக்கு தென்னங்கன்று, மா, கெய்யா, நெல்லி மரக்கன்றுகளை வழங்கினார். இவ் விழாவில் வேளாண்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்…
சேலையூரில் லவ் பேர்ட்ஸ் கூண்டுக்குள் புகுந்த பாம்பு

தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் சையத், இவர் வீட்டில் இரும்பு கம்பி கூண்டில் லவ் பேட்ஸ் ஜோடிகளை வளர்த்து வந்தார். வழக்கம்போல் காலை பார்த்தபோது லவ்பேட்ஸ் அலறியவாறு ஒரே பானை மீது அமர்ந்து அச்சத்துடன் இருந்துள்ளது. இதனால் கூண்டில் பார்த்தபோது பாம்பு ஒன்று பதுங்கியதை பார்த்துள்ளார். இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் நேரில் வந்து பாம்பு பிடிக்கும் கருவி மூலமாக லவ்பேட்ஸ் பானை கூட்டில் பதுங்கிய 4 அடி நீளமுள்ள […]
அண்ணாமலைக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் கேள்வி

ஆலந்தூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 60 அணிகள் கலந்துக்கொண்ட கிரிகெட் போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்து அவர்களுக்கு கிரிகெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் அன்பரசன்:- மணிப்பூர் கலவரம் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் நாட்டில் எங்கும் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழமுடியாத சூழல் உள்ளது. ராமேஸ்வரத்தில் பாஜக நடத்தும் 9 ஆண்டுகால சாதனையில் 15லட்சம் வழங்கியது. 18 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஜி.எஸ்.டி வரி அமுல் செய்து மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது […]
பிரசவ கால இறப்பு. தமிழகம் புதிய சாதனை

மீனம்பாக்கத்தில் தேசிய அளவில் மகப்பேறு மருத்துவர்களின் இரண்டுநாள் மாநாடு துவங்கியது, முதல் நாள் மாநாட்டு துவக்கமாக பெண்கள் தங்களின் உடல்நலனில் அக்கரை காட்ட வேண்டும் குறிப்பாக இளம் பெண்கள் உள்ளிட்டோரை பாதிக்கும் இரத்தசோகை, ஆரம்பகால் புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “மாற்றம்” என்கிற வார்த்தை புரிந்தும் தெரிந்து கொள்ளவேண்டும் என ஊர்வலமாகவும், மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதனையடுத்து செய்தியார்களிடம் பேசிய இந்திய மகப்பேறு மருத்துவ சம்மேளன தலைவர் ரிஷிகேஷ் பாய்:- உலக அளவில் […]
மணிப்பூர் சம்பவம் : தாம்பரம் மேயர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் பாலியல் வன்கொடுமையை தடுக்கா ஒன்றிய பாஜக அரசை கண்டித்து செம்பாகத்தில் தாம்பரம் மேயர் தலைமையில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை தடுக்காத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தாம்பரம் சட்டமன்ற தொகுதி திமுக மகளிர் அணி சார்பில் செம்பாக்கம், காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் […]
தாம்பரம் மாநகராட்சியில் சரியாக குப்பை அள்ளாத தனியார் நிறுவனம். உறுப்பினர்கள் சரமாரி புகார்

தாம்பரம் மாநகராட்சியின் சாதாதணகூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது.இதில் துணை மேயர் ஜி.காமராஜ், ஆணையாளர் அழகு மீனா ஐ.ஏ.எஸ் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 74 முக்கிய பொருள்களை மன்ற கூட்டத்தில் முன் வைத்து விவாதிக்கப்பட்டது. அப்போது மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி உள்ளாட்சி பிரமுகர்களாக மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்கிட தமிழக முதலமைச்சர் அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதனையடுத்து பேசும்போது குப்பைகளை அகற்ற அவர் லேண்ட் […]
அன்புமணி கைது தாம்பரத்தில் பாமக மறியல்

என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராக பாமகவினர் ஆர்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். அப்போது பேருந்துகள் போலீஸ் வாகனங்கள் அடித்து சேதமான நிலையில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டர். இதனை கண்டிக்கும் விதமாக தாம்பரத்தில் பாமக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கருப்பசாமி தலைமையில் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் பேரூந்து உள்ளிட்ட வானகங்களை மறித்து சாலையில் படுத்த பாமகவினர் 50 க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் மார்கமாக போக்குவரத்து […]
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம்

தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் தலைமையில் இன்று (28.07.2023) மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் கோ.காமராஜ், ஆணையர் ஆர்.அழகுமீனா, மண்டலக் குழு தலைவர்கள், நிலைக் குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.