பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்ப சுவாமி 51 ஆம் ஆண்டு மலர் பூஜை

குரோம்பேட்டை பத்மநாபன் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு 51 ஆம் ஆண்டு மலர் பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் மகா கணபதி ஹோமம், 51 வகை சிறப்பு அபிஷேகம்,சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று மதியம் ஒரு மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதான உபயதாரர் சங்கர் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர்கள் நித்யா சங்கரநாராயணன் மற்றும் சங்கரநாராயணன் தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கினர். […]

சென்னை எழும்பூரில்2,000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்.

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற நிலையில் கைது.

நாளை (டிச.11) 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

BREAKING || தெற்கு மத்திய வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது

மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை – தமிழக கடற்கரையை அடுத்த 24 மணி நேரத்தில் அடையக்கூடும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கார்த்திகை தீபத்தையொட்டி தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

விழுப்புரத்தில் இருந்து தி.மலைக்கு 2 ரயில்களும், திருச்சியில் இருந்து தி.மலை வழியாகவேலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை

அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த பாஜக, பாமக வலியுறுத்துமா? சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு வரும் டிச.13ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு.

அதனை ஈடுசெய்யும் வகையில் டிச.21ம் தேதி வேலைநாளாக அறிவிப்பு.

தெற்கு வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!..

நாளை மத்திய வங்கக்கடலிலும், டிசம்பர் 2வது வாரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலிலும் உருவாக வாய்ப்பு” கணினி மாதிரிகள் அடிப்படையில் வானிலை ஆய்வு மையம் கணிப்பு இவை இரண்டும் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு தற்போதைய வானிலை நிலவரப்படி இல்லை” குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாவதில் தாமதம் ஏற்படவும் வாய்ப்பு”

அடுத்த ரவுண்டு ரெடி! வங்க கடலில் 7ம் தேதி உருவாகுது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. ஐஎம்டி கணிப்பு

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் வரும் 7 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர கூடும் என்றும், 12 ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்க கடலில் தமிழ்நாடு – இலங்கை கடலோர பகுதிகளை அடையும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.மழை சற்று லீவு விட்டது போல தெரிந்துள்ள […]

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு; நாளை பதவியேற்க உள்ளார்.

மும்பையில் நடைபெற்ற பாஜகவின் மையக் குழுக் கூட்டத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் இருவரும் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல். மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆன பிறகு முதல்வர் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணி கட்சிகளிடையே முதல்வர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வந்த நிலையில் பட்னாவிஸ் முதல்வராக தேர்வு..