தட்கல் டிக்கெட் – ஆதார் இணைக்கும் பணி தொடக்கம்
தட்கல் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியது IRCTC ஜுலை 1 முதல் ஆதார் OTP அடிப்படையில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே அறிவித்து உள்ளது
ஈரானில் குண்டு வீச இந்திய வான்வெளி பயன்படுத்தப் பட்டதா?
ஈரானில் அமெரிக்கா 3 அணு சக்தி நிலையங்கள் மீது குண்டு வீசியதாக அறிவித்துள்ளது இதற்காக இந்திய வான் வெளியை அமெரிக்கா பயன்படுத்தியதாக செய்தி வெளியாகி உள்ளது இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது
அமெரிக்கா தொடங்கிய ஆபத்தான போர் – ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதல் மூலம் ஆபத்தான போரை தொடங்கியுள்ளது. இது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் தெரிவித்துள்ளார் அவர் உடனடியாக ரசிய அதிபர் புதினை சந்திக்கவும் புறப்பட்டு செல்கிறார்.அமெரிக்க தாக்குதல் மூலம் இதுவரை இஸ்ரேலுக்கு பின்னணியில் இருந்தது அமெரிக்கா தான் என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்
சென்னை மூத்த குடிமக்களுக்கு இலவ பஸ் பயண – டோக்கன்
மாநகர பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணிக்க இன்று முதல் டோக்கன் வழங்கப்படும். இன்று முதல் ஜூலை 31 வரை காலை 8.00 – இரவு 7.30 வரை 40 மையங்களில் டோக்கன்கள் தரப்படுகிறது. ஜூலை முதல் டிசம்பர் வரை மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கானது வழங்கப்படும். 40 மையங்களில் அடையாள அட்டைகள் புதுப்பித்தல் மற்றும் புதியபயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும். இருப்பிடச்சான்று, வயது சான்று, 2 புகைப்படங்களுடன் வர வேண்டும் […]
யோகா நிகழ்ச்சியில் 51 தண்டால் எடுத்த கவர்னர்
ஆர் என் ரவி இன்று மதுரை வந்தார். சர்வதேச யோகா தினத்தை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் அப்போது அவர் மாணவர்களுக்கு யோகாசனம் செய்து காண்பித்தார். இந்த நிகழ்ச்சியின் போது 73 வயதான அவர் 51 தண்டால் எடுத்து அசத்தினார்
போலீஸ் அனுப்புவது போல் குறுந்தகவல் அனுப்பி வங்கி கணக்கில் பணம் பறிப்பு
சென்னை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில் இவரது இருசக்கர வாகனத்தை இரு தினங்களுக்கு முன்பு அவரது மனைவியும் அவருடைய தம்பியும் எடுத்துக் கொண்டு வெளியில் சென்று வந்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறை அனுப்பும் குறுந்தகவல் போன்று ஒரு மெசேஜ் செந்தில் செல்போன் எண்ணிற்கு வந்துள்ளது. அந்த மெசேஜில் இருந்த லிங்கை கிளிக் செய்து என்ன அபராதம் என பார்க்க முயன்ற போது செல்போன் ஹாங் ஆகி விட்டது, அதன் பின் செந்தில் […]
இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க உத்தரவு.
வரும் ஜனவரி முதல் புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ABS எனப்படும் Anti-lock Braking System பொருத்த வேண்டும் தற்போது 40% வாகனங்களில் ABS பொருத்தப்படவில்லை – என ஒன்றிய சாலை போக்குவரத்து.. துறை கூறி உள்ளது
குரோம்பேட்டையில் கைவிடப்பட்ட ரயில்வே பாலம்
குரோம்பேட்டையில் 19 ஆண்டுகளாக ராதா நகர் சுரங்கப்பாதை பணி நடந்து வருகிறது இதற்கிடையே வைஷ்ணவி காலேஜ் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை விடப்பட்டது ஆனால் இது பற்றி தகவல் அறியும் சட்டத்தில் கேட்டபோது சுரங்கப்பாதை அமைக்க போதிய நிலம் இல்லாததால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவித்துள்ளனர்
ஏடிஜிபி ஜெயராம் எதற்காக சஸ்பெண்ட்? ரத்து ஆகுமா ?
சிறுவன் கடத்தல் வழக்கில் ADGP ஜெயராம் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். ஜெயராமை கைது செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவில் சுப்ரீம் கோர்ட் கருத்து. கூறி உள்ளது. சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து தமிழ்நாடு அரசின் ஆலோசனையை பெற்று நாளை பதிலளிக்க உத்தரவு. பிறப்பித்தது.
தாம்பரம் செங்கோட்டை ரயிலில் கூடுதல் பெட்டிகள்
தாம்பரம் – செங்கோட்டை சிலம்பு அதிவிரைவு ரெயில் 2.தாம்பரம் – நாகர்கோவில் அதிவிரைவு ஆகிய ரயில்களில் கூடுதலாக 3 ஸ்லீப்பர் பெட்டிகள், 1 2nd AC ,1 3rd AC, 1 Unreserved பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது இந்த கூடுதல் பெட்டிகள் சேவைஜூன் 20 முதல் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.