உலக கோப்பை கால்பந்து நடுவர்களாக மூன்று இந்தியர்கள் தேர்வு
உலக கால்பந்து சம்மேளன (பிபா) நடுவர்களாக இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் தேர்வாகியுள்ளனர். இதுதொடர்பாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: குஜராத்தை சேர்ந்த ரச்சனா கமானி, புதுச்சேரியைச் சேர்ந்த அஸ்வின் குமார், டெல்லியைச் சேர்ந்த ஆதித்யா புர்கயஸ்தா ஆகியோர் பிபா நடுவர்களாக தேர்வாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் முரளிதரன் பாண்டுரங்கன்(புதுச்சேரி), பீட்டர் கிறிஸ்டோபர் (மகாராஷ்டிரா) ஆகியோர் பிபா உதவி நடுவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த ஆண்டின் முக்கிய நிகழ்ச்சியாக உலக கோப்பை […]
முதலில் புத்தாண்டை கொண்டாடிய நாடு
‘கிறிஸ்துமஸ் தீவு” எனப்படும் பசிபிக் தீவு நாடான “கிரிபதி”தான் 2026 புத்தாண்டை முதலில் வரவேற்கும் நாடாக இருக்கிறது. சர்வதேச தேதிக் கோட்டிற்கு அருகில் இத்தீவு அமைந்துள்ளதால் கிட்டத்தட்ட ஒருநாள் முன்னதாகவே புத்தாண்டு பிறக்கிறது.இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணிக்கு அங்கு நள்ளிரவை எட்டியதால் உலகிலேயே முதல் நாடாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணத் தேதி
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் காதலித்து வருகிறார்கள். இதனை மறைமுகமாக பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஹைதராபாத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் கலந்துக் கொண்ட திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது
ஜப்பானின் ஸ்மார்ட் கழிப்பறைகள்
ஜப்பானின் புதிய ஸ்மார்ட் கழிப்பறை, உங்கள் கழிவுகளின் வடிவம், நிறம் மற்றும் வேதியியல் மாற்றங்களை ஆய்வு செய்து, முழுமையான ஆரோக்கிய அறிக்கையை நேரடியாக உங்கள் கையடக்க தொலைபேசிக்கு அனுப்பி வைக்கின்றன! இதில் உள்ள சிறப்பம்சங்கள்:செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன சென்சார்கள் மூலம் இவை செயல்படுகின்றன. சிறுநீரைப் பரிசோதிக்கும் வசதி இதில் உள்ளமைக்கப்பட்டுள்ளது. உங்கள் அன்றாட இயற்கை உபாதைகளை வைத்தே, உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் கண்டறியலாம். எதிர்கால மருத்துவ உலகம் உங்கள் வீட்டுக் கழிப்பறையிலிருந்தே தொடங்குகிறது! […]
தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு. சி, டி பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்ச வரம்புக்குட்பட்டு மிகை ஊதியம். ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ரூ.1,000 பொங்கல் போனஸ். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கும் ரூ.1,000 போனஸ்.
2026 மிகவும் ஆபத்தான ஆண்டு…பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்.!
பாபா வங்காவின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை . 1996ம் ஆண்டிலேயே இவர் உயிரிழந்துவிட்ட போதிலும், எதிர்காலம் குறித்த இவரது கணிப்புகள் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் பாபா வங்கா இறப்பதற்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். இவருடைய கணிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. பாபா வாங்கா 2026ஆம் ஆண்டு நடக்கும் என கூறியுள்ள சில கணிப்புகள்.. […]
தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.99,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.12,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1000 குறைந்து, ரூ.2.56 லட்சத்திற்கு விற்பனை.
பொங்கலுக்கு பிறகு கூட்டணி உறுதியாகும் – நயினார் நாகேந்திரன்
பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கூறியதாவது:- தேசிய ஜனநாயக கூட்டணி பொங்கலுக்கு பிறகு உறுதியாகும் எங்கள் அணியில் ஓபிஎஸ் மற்றும் தினகரன் இணைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றார்.
சிகரெட் விலை உயர்கிறது
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என நிதி அமைச்சகம் தெரிவிப்பு! இதன்படி ஒரு சிகரெட்டின் விலை ரூ.72க்கு விற்கப்படலாம் என்றொரு செய்தி பரவுகிறது
டெல்லியில் அடர்ந்த மூடுபனி காரணமாக 148 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன
டெல்லியில் இன்று அடர் பனிமூட்டத்துக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில், 148 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக அடர் பனிமூட்டம் மற்றும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக டெல்லி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.