
அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், கோடீஸ்வர்கள் என பல தரப்பினரும் சுவிஸ் வங்கிகளில் பெரும் பணத்தை போட்டு வைக்கின்றனர்.
சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில், கடந்த ஆண்டு இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்த பணம் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த 2024-ம் ஆண்டு 3.5 பில்லியன் பிராங்க் (சுவிஸ் கரன்சி) அளவுக்கு இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ளனர். இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.37,600 கோடியாகும். கடந்த 2021-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியர்கள் செய்துள்ள அதிகபட்ச முதலீடாகும்.