
வண்டலூரில், தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை….!!!
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ரபீயா பேகம், 16. இவர், வண்டலூர், கிரசன்ட் பள்ளியில், விடுதியில் தங்கி, பிளஸ் ஒன் படித்து வந்தார்.
இந்நிலையில், மாலை விடுதியின் 3வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். ரத்த காயத்துடன் மாணவியை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின், மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட ரபீயா பேகம், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவல்படி, சம்பவ இடம் வந்த கிளாம்பாக்கம் போலீசார், ரபீயா பேகம் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ரபியா பேகம் தற்கொலை செய்தாரா….??
அல்லது மாடியிலிருந்து தவறி விழுந்தாரா ??? என்பது குறித்து விசாரிக்கின்றனர்….