பருவமழையை எதிர்கொள்ள தயாரான சென்னை

சென்னையில் 25 இடங்களில் மெட்ரோ பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சிக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை கொடுத்துள்ளது. பருவமழை தொடங்க உள்ளதால் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் டிராக்டர் மீது லாரி மோதியதில் 10 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் டிராக்டர் மீது லாரி மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். 13 பேருடன் வாரணாசியை நோக்கி சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். அதில், “முதல் மாநில மாநாடு நடைபெறும் வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம். ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி இல்லை என்பதை மாநாடு மூலம் நாம் நிரூபிப்போம்,”இவ்வாறு தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்கழகம் மாநாட்டிற்கான பணிகள் விறுவிறுப்பு

மாநாடு நடைபெறும் இடத்தை சமன்படுத்தும் பணி தொடங்கியது 50 அடி உயரம் 800 அடி அகலத்தில் செயின் ஜார்ஜ் கோட்டை போன்ற முகப்பு அமைக்க திட்டம் மாநாட்டு திடலுக்கு மொத்தம் 20 வழிகள்- அதில் 10 உள்ளே வரும் பாதை , 10 வெளியேறும் பாதை 80 ஏக்கர் பரப்பளவு இடத்தில் உள்ள 6 கிணறுகள் மூடப்படுகின்றன.
குரோம்பேட்டையில் ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளை

குரோம்பேட்டை போஸ்டல் நகர், தனலட்சுமி தெருவை சேர்ந்தவர் மாலதி ராணி இவர் பொத்தேரி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இவரது வீட்டில் பால அரவிந்த் என்பவர் மனைவியுடன் வாடகைக்கு தரைதளத்தில் குடியிருந்து வருகிறார்..மாலதி ராணி அடையாரில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்வாடகைக்கு குடியிருந்த பால அரவிந்த் மனைவி மற்றும் உறவினர்களுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க சென்றார்.. இருவரும் இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவுகள் […]
சென்னையில் தக்காளி விலை இருமடங்காக உயர்ந்துள்ளது

கடந்தவாரம் ரூ.35-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.85-க்கு விற்பனையாகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை உயர்வு என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்லில் போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற வாலிபருக்கு துப்பாக்கி சூடு
திண்டுக்கல்லில் வாலிபர் இர்பான் கொலை வழக்கில் தொடர்புடைய ரிச்சர்ட் சச்சின் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற போது தனிப்படை போலீசார் முழங்காலில் சுட்டு பிடித்தனர். படுகாயம் அடைந்த வாலிபர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ரவுடி தாக்கியதில் காவலர் அருண் என்பவர் படுகாயம்
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில்

வரும் 7 – 11ம் தேதி வரை ‘ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்ஷ்த் பாரத்’ போன்ற பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டண்ட் பொருத்தப்பட்டது உடல் நலம் தேறிய நிலையில், நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.
தவெக முதல் மாநில மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா மற்றும் பூமி பூஜை

த.வெ.க.வின் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டது.