“தி.மு.க-வுக்கும் குற்றவாளிக்கும் எந்த தொடர்பும் இல்லை”

“அண்ணாமலை சாட்டையால் அடித்துகொள்வது கேலிக்கூத்தாக உள்ளது” “வாழ்நாள் முழுவதும் அண்ணாமலை செருப்புஅணிய முடியாத சூழல் ஏற்படும்” – அமைச்சர் ரகுபதி

பொங்கல் பண்டிகையின்போது, தமிழகம் முழுவதிலும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலம் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட உள்ளது

இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் கைத்தறி மற்றும் பெடல் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால், கைத்தறி மற்றும் பெடல்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகளுக்கு இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 2025 தைப் பொங்கல் திருநாளையொட்டி, தமிழகம் முழுவதிலும் உள்ள ஏழை மக்களுக்கு ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், அதேபோல ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளும் வழங்கப்பட உள்ளன.இந்நிலையில் பொங்கல் இலவச வேட்டி […]

அண்ணா பல்கலை.யில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தின் எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்கள் அடையாள அட்டை கேட்டால் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்முறையை […]

இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என். சீனிவாசன் ராஜினாமா

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவரும், நிர்வாக இயக்குநருமான என்.ஸ்ரீநிவாசன் அப்பதவிகளில் இருந்து விலகியுள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 32 சதவீத பங்குகளை ஆதித்ய பிர்லா குழுமத்தின் அல்ட்ரா டெக் கையகப்படுத்துவதற்கு சிசிஐ எனப்படும் இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியா சிமெண்ட்ஸின் 10.13 கோடி பங்குகளை வாங்கும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.7,000 கோடியாகும். இந்த கையகப்படுத்தல் நடவடிக்கையின் மூலம் அல்ட்ரா டெக் சிமெண்டின் துணை நிறுவனமாக இந்தியா சிமெண்ட்ஸ் உருவெடுக்கும். இந்தியா சிமெண்ட்ஸை […]

அரையாண்டு விடுமுறை: பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது – கல்வித் துறை எச்சரிக்கை

அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 23-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. அரையாண்டு விடுமுறைக்கு பிறகு அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. இந்த இடைப்பட்ட நாட்களில் சில தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஒரு சில குறிப்பிட்ட வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக புகார்கள் […]

உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து பெண்களின் அந்தரங்கப் பதிவு வலைத்தளங்களில் பகிரப்பட்டதா? கைதான 2 பேரின் உறவினர்கள், நண்பர்களின் செல்போன்கள் ஆய்வு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரை பகுதியில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் உடை மாற்றுவதற்கு தனியார் உடை மாற்று அறைகள் உள்ளன. கடந்த 23ம் தேதி புதுக்கோட்டை பக்தர் ஒருவரின் குடும்பத்தினர் உடை மாற்றியபோது, அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின்பேரில், கோயில் போலீசார் ராமேஸ்வரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (34), மீரா மைதீன் (36) ஆகிய இருவரை கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து ரகசிய கேமராக்கள், செல்போன், மெமரி […]

சபரிமலை கோயில் நடை அடைப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ம் தேதி துவங்கிய மண்டல காலம் நிறைவு. இன்று இரவு 1 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் – கோயில் நிர்வாகம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் முழுவதும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் இருந்து ஒரு தெளிவான திட்டம் புலப்படுகிறது. தொடர்ந்து தமிழகமெங்கும் நடைபெறும் குற்றங்களில், குற்றவாளிகள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் அழுத்தத்தால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே. தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக, 15 வழக்குகள் உள்ள ஒருவரை, இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவைத்ததால்தான், இன்று ஒரு அப்பாவி மாணவிக்கு இந்தக் கொடூரம் நடைபெற்றிருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க திமுக […]

வாடிக்கையாளர்களை ஈர்க்க வாட்ஸ் அப் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது ஆவணங்களை ஸ்கேன் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது

இதனால் மூன்றாம் தரப்பு செயலிகளை ஸ்கேனிங்கிற்கு பயன்படுத்த தேவையில்லை. வாட்ஸ் அப்பில் ஸ்கேன் செய்து அப்படியே ஆவணங்களை அனுப்பலாம். முதல்கட்டமாக IOS பயனர்களுக்கு இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவா களைகட்டி உள்ளது.

இந்நிலையில், வடக்கு கோவாவில் உள்ள கலங்குட் கடற்கரை பகுதியில் இருந்து ஒரு சுற்றுலா படகு நேற்று சென்று கொண்டிருந்தது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் கெட் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் உள்பட 21 பேர் பயணம் சென்றனர். அரபி கடலின் நடுவே சென்று கொண்டிருந்த சுற்றுலா படகு அதிக பாரம் காரணமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் கடலில் தத்தளித்து கொண்டிருந்த அனைவரையும் மீட்டு […]