
செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 22 ஆவது வார்டு நெமிலிச்சேரி மற்றும் 39 ஆவது வார்டு திருமலைநகர்* ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன் ஆய்வு மேற்கொண்டார் . அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மழைக்காலங்களில் தங்கள் பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும் அதனால் தங்களுக்கு
பல சிரமங்கள் ஏற்படுவதாவும் ஆகையால் இப் பணியினை முழு வேகத்தில் செயல்படுத்துமாறு மண்டல குழு தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.