
அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிறபோது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்.
அனைத்துக் கட்சிகளும் மது, போதைப்பொருள் வேண்டாம் என்ற கருத்தில் உடன்படுகின்றன.
கட்சிகள் உடன்பட்டாலும் நாடு முழுவதும் மதுக்கடைகள் திறந்திருக்கின்றன; மது ஆலைகள் இயங்குகின்றன.
எல்லாக் கட்சிகளும் மதுவிலக்கு தேவை எனும்போது மதுக்கடைகள் ஏன் திறந்திருக்கின்றன?
‘மதுவை ஒழிப்போம் மனிதவளம் காப்போம்’ என தான் பேசிய வீடியோவை X தளத்தில் பகிர்ந்தார் விசிக தலைவர் திருமாவளவன்.