தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது

சென்னையில் துண்டு பிரசுரங்களை விநியோகித்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டார். முன் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக கூறி, தனியார் மண்டபத்தில் உள்ள சந்திப்பு இடத்தில் அவரை கைது செய்து, தி.நகர் போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் ஆளுநர் ரவியை சந்தித்து மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும், மாநில அரசு கோரியுள்ள பெஞ்சல் புயல் நிவாரணத்திற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று தர வேண்டும் என்று விஜய் தனது மனுவில் கோரியுள்ளார்.

ஒரே நாளில் பதவி உயர்வு பெற்ற IPS ஜோடி

. IPS ஜோடியான வருண்குமார், வந்திதா பாண்டே இருவரும் ஒரே நாளில் DIGஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ▪️. 2011 பேட்ச்சை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அருகருகே உள்ள திருச்சி – புதுக்கோட்டை மாவட்டங்களில் SPக்களாக பணியாற்றி வந்த நிலையில், இனி முறையே திருச்சி – திண்டுக்கல் சரக DIGகளாக பணியாற்ற உள்ளனர். இவர்கள் நாதக கட்சியினரால் சமூக வலைதள தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது

சென்னையில் துண்டு பிரசுரங்களை வழங்கியதவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது. முன் அனுமதியின்றி கூட்டத்தை கூட்டியதற்காக, ஆனந்தை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ள தி.நகர் போலீசார்.