இந்தத் தப்புத் தாமதத்திற்குப் பிறகு ஒப்புதல் தந்தாலும்
பெரியவர் சங்கரய்யா அதை இடக்கையால் புறக்கணிக்க வேண்டும். பெயருக்கு முன்னால் அணிந்து கொள்ள முடியாத மதிப்புறு முனைவர் பட்டத்தைவிடத்
தீயைத் தாண்டி வந்தவரின் தியாகம் பெரிது. கொள்கை பேசிப் பேசிச் சிவந்த வாய் அவருடையது. இனி இந்த வாடிப்போன வெற்றிலையாலா
வாய்சிவக்கப் போகிறது?

கவிப்பேரரசு வைரமுத்து