
இலங்கை, அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும்தெற்கு வங்கக்கடல் பகுதியில் தலா ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்துள்ள வானிலை மையம், அடுத்த 7 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆகிய 13 மாவட்டங்களில் இன்றும் வரும் 3 மற்றும் 4 ஆம் தேதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.