
❝ வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர்கள் மீது ஈச்சர் லாரி மோதி விபத்து. 4 பேர் படுகாயம். வாணியம்பாடி, அக்.30- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளும் போன்களை பொருத்தும் பணியில் திருவண்ணமலை மாவட்டம் குள்ளகுடி கிராமத்தை சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 10 பேர் ஈடுபட்டிருந்ததனர். அப்போது புனேவில் இருந்து பைப்களை ஏறிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற லாரி நிலை தடுமாறி அங்கு பணியில் ஈடுபட்டவர்கள் மீது வேகமாக மோதி சாலையின் குறுக்கே லாரி கவிந்து விபத்துக்குள்ளானது. ❞