தாம்பரம் மாநகராட்சியின் 4வது மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் டி.காமராஜ் தலைமையில் மண்டல குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் உதவியாளர் ஷகிலா, மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மண்டல குழு தலைவர் டி.காமராஜ் பேசுகையில் :
மண்டல அலுவலகத்தில் ஆட்கள் பற்றாக்குறைக்கு குறித்து துறையின் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
மழை காலத்தில் எங்கெல்லாம் தண்ணீர் நிற்குமோ அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்ணீர் தேங்கி நிற்காமல் உடனடியாக செல்லும்படி வழி செய்து அங்கு தண்ணீர் செல்ல பைப் லைன் அமைக்கும் தற்காலிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாமன்ற உறுப்பினர்கள் மழை சம்பந்தமான எந்த ஒரு புகார்களாக இருந்தாலும் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்.
பாதிப்புகளை சரி செய்ய மண்டல அலுவலக பொறியாளர் பிரிவு மற்றும் சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என 120க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து 2 கோடியே 42 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு புதிய பணிகள் மற்றும் 3 கோடியே 78 லட்சம் ரூபாய்க்கு பணி உத்தரவு என மொத்தம் 6 கோடியே 20 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் 20 தீர்மானங்களுக்கு கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டது.