படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்தவர் சங்கர்(58) ஓட்டல் நடத்திவந்தார். இன்று பிற்பகல் ஒருமணியளவில் தாம்பரத்தை நோக்கி இருசக்கர வாகனத்தை தலைக்கவசம் அணிந்தவாறு ஓட்டிவந்தார். முடிசூரை தாண்டி பெருங்களத்தூரில் வரும்போது கருங்கல் ஜல்லிகளை ஏற்றிவந்த டாரஸ் லாரி சங்கர் ஓட்டிசென்ற இருசக்கரவாகனத்தின் பின்னால் மோதியதில் கீழே விழுந்தவர் தலையில் டாரஸ் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே சங்கர் உயிரிழந்தார்.

இதனால் டாரஸ் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுனர் தப்பியோடினார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியினர் லாரியை சிறைப்பிடித்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் பிரேதத்தை கைப்பற்றிய நிலையில் தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடிவருகிறார்கள். தாம்பரம் முடிச்சூர் சாலை இருபுறத்திலும் ஆகிரமிப்புகள் உள்ளதாலும், அதிக பாரத்துடன் டாரஸ் லாரிகள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.