இந்நிலையில், மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி அந்த சமூகத்தை சேர்ந்த மனோஜ் ஜராங்கே சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார். மராத்தாக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, இவர்களுக்கு ஆதரவாக ஷிண்டே ஆதரவு சிவசேனா எம்பிக்கள் ஹேமந்த் பாட்டீல், ஹேமந்த் கோட்சே ஆகியோர் நேற்று திடீரென ராஜினாமா செய்தனர். போராட்டக்காரர்கள் தேசியவாத காங்கிரஸ் அலுவலகங்கள், பீட் தொகுதி எம்எல்ஏவின் வீட்டுக்கு தீ வைத்தனர்.