
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி கிழக்கு தாம்பரத்தில் கையெழுத்து இயக்கம்,
காஞ்சி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி சார்பில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில்
இதில் செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன், தாம்பரம் நாரயணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். சென்னை கிறித்தவகல்லூரி மாணவர்கள், பாரத் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர கழக துணைச் செயலாளர் பொன் சதாசிவம், அமைப்புசாரா ஓட்டுனர் அணியின் மாவட்ட அமைப்பாளர் தாம்பரம் நாராயணன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் இன்ஜினியர் ராமமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை அணி துணை தலைவர் ஷாஜகான், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் கல்யாண மன்ராஜ், மாவட்ட தொண்டர், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜின்னா, முன்னாள் அமைப்பாளர் பா.குறிஞ்சி சிவா, முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் இரா.தேவராஜ் மற்றும் ஏராளமான மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் நீட் தேர்வை எதிர்த்து உற்சாகமாக கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்ச்சியினை காஞ்சி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் கிருத்திகா தேவி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் விக்கி(எ) விக்னேஸ்வரன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் வே. சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.