
தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டல குழு கூட்டம் மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பொறியியல், சுகாதாரபிரிவு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
அப்போது தூர்வாரப்பட்ட கழிவுகள் ஆங் ஆங்கே தேக்கம் அடைந்துள்ளதாக மாமன்ற உறுப்பினர்கள் எடுத்துக்கூறினார்கள., அப்போது பேசிய மண்டல குழு தலைவர் மழை முன்னெச்சரிக்கை பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புடன் செயலாற்ற வேண்டும். போதிய பணியாளர்களுடன் மாமன்ற உறுபினர்களுடன் இணைந்து வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். மழை நேரத்தில் முன்கூட்டியே மாநகராட்சி அலுவலகத்தில் முகாமிட்டு 24 மணி நேரமும் செல்போன் தொடர்பில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்னுடைய செல்போனில் எந்த நேரத்தில் அழைத்தாலும் நேரில் வருவேன் என கூறினார்.
அப்போது 26 வது வார்டு மதிமுக மாமன்ற உறுப்பினர் புஹிரபானு நாசர் வைணவா கல்லூரி ரயில்வே கேட் அருகே, ராதா நகர் ராஜாஜி சாலை சந்திப்பிலும் ஐ மாஸ் லைட் அமைக்க 3 மாதமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருவதாகவும், பழுதடைந்த சில சாலைகளை சீர் செய்துதரவேண்டும். நாய்களை கருத்தடை செய்திட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை உரிய நடவடிக்கை எடுப்பதாக மண்டல குழுத்தலைவர் ஜோசப் அண்ணாதுரை தெரிவித்தார்.