
சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாழ்ந்த பகுதி மண் சேகரிக்கப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்பட்டது.
என் மண் என் தேசம் என்ற திட்டத்தின் படி சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த, வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளில் இருந்து ஒரு பிடி மண் எடுக்கப்பட்டு தலைநகர் டெல்லியில் போர் நினைவு சின்னம் இருக்கக்கூடிய பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை சுற்றி அந்த மண் தூவப்பட்டு 7500 மரங்களை நடை திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்ந்த பகுதிகளிலிருந்து மண் சேகரிக்கப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற சிறப்பு ரயிலில் பாஜக நிர்வாகிகள் கொண்டு சென்றனர்.
சேகரிக்கப்பட்ட மண்பானைகளை தாம்பரம் ரயில் நிலையத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் பாஜக நிர்வாகிகளிடம் வழங்கி கோஷங்கள் எழுப்பி வாழ்த்து தெரிவித்து அவர்களை வழி அனுப்பி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் கூறுகையில் :
விடுதலை பெற்ற இந்தியாவின் வீர வரலாற்றை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதற்காக நரேந்திர மோடியின் யோசனையின்படி என் மண் என் தேசம் என்கின்ற திட்டம் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த, வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளில் இருந்து ஒரு பிடி மண் எடுக்கப்பட்டு அந்த குடங்கள் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் போர் நினைவு சின்னம் இருக்கக்கூடிய பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை நம்முடைய சுதந்திரத்தின் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஏற்கனவே நரேந்திர மோடி அங்கு நிறுவியுள்ளார்.
அந்த சிலையை சுற்றி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து மண் எடுக்கப்பட்டு அந்த மண் வரும் ஒன்றாம் தேதி அங்கு துவப்பட உள்ளது.
அந்த மண் இருக்கின்ற பூமிகளில் கிட்டத்தட்ட 7500 மரங்களை நடை இருக்கின்றனர், சுதந்திர காடை உருவாக்க இருக்கின்றார்கள்.
நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டது இப்போது வைக்கப்பட உள்ள மரங்கள் வளர்ந்து 25 ஆண்டுகள் முடிவடைந்த பிறகு நம்முடைய சுதந்திர இந்தியாவின் நூற்றாண்டை கொண்டாடும் போது இன்றைய இளைஞர்கள், இன்று இருக்கக்கூடிய முதல் நிலை வாக்காளர்கள் எல்லாம் தேசத்துடைய பாரம்பரியத்தை, வீர வரலாற்றை, சுதந்திர வரலாற்றை, தேசபக்தியை புரிந்து கொள்ளக்கூடிய அளவிலே இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் பகுதியில் இருக்கக்கூடிய மா.பா.சிவஞானம் ஐயா அவர்கள் வீட்டில் இருந்த மண் அதேபோல மதுராந்தகம் ஏரி ராமர் கோவிலில் இருந்த மண் எடுக்கப்பட்டுள்ளது.
சுபாஷ் சந்திர போஸ் உடன் சிறையில் இருந்த மறைமலை நகர் பகுதியில் உள்ள நின்னகரை கிராமத்தை சேர்ந்த நடேசன் நாயக்கர் வீட்டில் இருந்த மண் என எட்டு வருவாய் ஒன்றியங்களில் இருந்து மண் எடுக்கப்பட்டு அனைத்து மண்களும் பாஜக நிர்வாகிகள் மூலம் ரயிலில் டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது என தெரிவித்தார்.