திமுக தேர்தல் அறிக்கையின்படி அனைத்து மகளிர்க்கும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்காதது, பால், மின்சார கட்டணம், சொத்துவரி உயர்வை உள்ளிட்டவைகளை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம் முடிச்சூர், லட்சுமி நகர் பகுதியில் நடைபெற்றது.
இதில் மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.