
தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரி, பஞ்சாயத்து காலனியை சேர்ந்தவர் மணி, (55) இவரது இளைய மகன் சந்துரு( 19) குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் 18ம் தேதி இரவு, மது அருந்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
இதைபார்த்த மணியின் மூத்த மகன் கார்த்திக், 32, என்பவர் தம்பியை தட்டி கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைபார்த்த தந்தை மணியும், இளைய மகன் குடித்துவிட்டு வந்ததை தட்டிகேட்டுள்ளார்.
அப்போது, ஆத்திரமடைந்த சந்துரு, தந்தையை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார் அதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இதையடுத்து, மணியை, சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையில், தந்தையை தாக்கிய மகனை, சேலையூர் போலீசார் கைது செய்து, கொலை முயற்ச்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணி, சிகிச்சை பலனின்றி, இன்று காலை உயிரிழந்தார்.
இதனையடுத்து சந்துரு மீது கொலை முயற்ச்சி என்று பதிவு செய்யபட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.