
கிழக்கு தாம்பரம் ரெயில்வே மைதானம் ஆங்கிலேயர் ஆட்சிகாலம் முதல் தாம்பரம், கிழக்கு தாம்பரம், சிட்லப்பாக்கம், சேலையூர், செம்பாக்கம் என சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் நடைப்பயிற்சி, தடகளம், கால்பந்து, கிரிகெட் என பல்வேறு விளையாட்டு விளையாடவும் இலவச பயிற்சி பெறவும் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தாம்பரம் ரெயில் முனைய விரிவக்கம் காரணமாக இந்த ரெயில்வே மைதானத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் கான்கீரிட் சீப்பர் கட்டைகள், ஜல்லிகளை ரெயில்வே நிர்வாக சேமித்து வைத்துள்ளது. மேலும் இந்த மைதானத்தையும் முழுமையாக தண்டவாளங்கள் அமைக்க போவதாக தகவல் வெளியானது.
இதனால் இங்கு நடைப்பயிற்சி, விளையாட்டு பயிற்சி, விளையாடும் வீரர்கள் என சுமார் 400 பேர் மைதானத்தில் ஒன்று திரண்ட நிலையில் தங்கள் விளையாட்டு மைதானம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் மைதானத்தை விளையாட்டிற்காக மட்டும் ரெயில்வே நிர்வாக பராமரிப்பு செய்திட வேண்டும் என தெரிவித்து மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இங்கு பல ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்டு மாநில, தேசிய விளையாட்டு வீரர்களாகவும், அதுபோல் விளையாட்டு ஒதுக்கீடுகளில் வேலையும், கல்லூரியில் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளதாகவும் அதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அரசுகள் தங்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.