
அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மீகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத் தக்கது; அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆன்மிக சேவையில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, கோயில் கருவறையில் பெண்களும் பூஜை செய்யலாம் என்பது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை ஆன்மிகத்தில் செய்த பங்காரு அடிகளாரின் மறைவு ஆன்மிக பக்தர்களுக்கு பேரிழப்பு – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்
அனைத்து சமூக மக்களையும் அரவணைத்து கரு சுமக்கும் பெண்களை கருவறை வரை சென்று தானே பூஜித்து வலம் வந்து எப்போதும் வழிபட வழிகண்ட ஆன்மீக தமிழ்மகன் பங்காரு அடிகளாரின் இழப்பு ஆன்மீக உலகிற்கு பேரிழப்பாகும் – ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
கோடிக்கணக்கான மக்களின் குருவாகவும், ஆன்மீக மற்றும் கல்விப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரும், ஏழை, எளிய மக்களின் வழிகாட்டியாகவும் விளங்கிய பங்காரு அடிகளார் அவர்களது மறைவு, நமது சமூகத்துக்குப் பேரிழப்பு – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
ஆன்மீக பணிகளோடு, பல சமூக நலப் பணிகளையும் சிறப்பாக ஆற்றிய பங்காரு அடிகளாரின் இழப்பு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு; இந்திய நாடு ஒரு மிகச் சிறந்த ஆன்மீகவாதியை இழந்துவிட்டது – முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்
ஆன்மிகவாதி என்பதைக் கடந்து பல்வேறு வகையான கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி, கிராமப் புற மக்களுக்கும் கல்வி வழங்கியவர். ஏழைகளுக்கு உதவி, இயற்கைப் பாதுகாப்பு என பல்வேறு வழிகளில் சமுதாயத் தொண்டுகளையும் செய்து வந்தவர் பங்காரு அடிகளார்; அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் – பாமக நிறுவனர் ராமதாஸ்