மு.க. ஸ்டாலின்‌ தலைமையில்‌ செங்கல்பட்டு மாவட்டம்‌, மறைமலைநகர்‌, மாநில ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சி நிறுவனத்தின்‌ கூட்டரங்கில்‌ “கள ஆய்வில்‌ முதலமைச்சர்‌” திட்டத்தின்‌ கீழ்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ திருவள்ளூர்‌ ஆகிய மாவட்டங்களின்‌ காவல்துறை உயர்‌ அலுவலர்களுடன்‌ சட்டம்‌ ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌, தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா, உள்துறை முதன்மைச்‌ செயலாளர்‌ பெ.அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர்‌ சங்கர்‌ ஜிவால்‌, காவல்துறை கூடுதல்‌ இயக்குநர்‌ (சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கு) ஆ.அருண்‌ செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ஆர.ராகுல்நாத்‌, காஞ்சிபுரம்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ கலைச்செல்வி மோகன்‌, திருவள்ளூர்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ மரு. த. பிரபு சங்கர்‌, ஆவடி மாநகர காவல்‌ ஆணையர்‌ கி.சங்கர்‌, தாம்பரம்‌ மாநகர காவல்‌ ஆணையர்‌ அ.அமல்ராஜ்‌, காவல்துறை தலைவர்‌ மரு.ந. கண்ணன்‌, காவல்துறை துணைத்‌ தலைவர் இரா.பொன்னி, செங்கல்பட்டு மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ வி.வி.சாய்‌ பிரணீத்‌, காஞ்சிபுரம்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ ம.சுதாகர்‌, திருவள்ளூர்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ பாகெர்ல சிபாஸ்‌ கல்யாண்‌ காவல்துறை மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.