கடப்பேரியில் உணவகத்தில் சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கேப்பியா அடித்து துவைத்த இளைஞர்கள் வெளியான சிசிடிவி காட்சி.

சென்னை தாம்பரம் அடுத்த கடப்பேரி, கண்ணன் தெருவில் ராஜகோபால் என்பவர் ஹயாத் மலேசியன் புரோட்டா பிரியாணி பாயிண்ட் என்ற பெயரில் கடந்த 2 வருடங்களாக உணவகம் வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று மதியம் ஆட்டோவில் உணவகத்திற்கு வந்த மது போதை ஆசாமி ஒருவர் சாப்பிட பிரியாணி கேட்டுள்ளார்.

கடையில் இருந்த சங்கர் என்பவர் பிரியாணி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட பிறகு, அந்த நபரிடம் சாப்பிட உணவிற்கு பணம் கேட்டதற்கு சிறிது நேரம் உணவகத்தின் வெளியில் சென்று காத்திருந்தவர் பின்னர் பணம் கொடுத்துள்ளார்.

பணத்தை கொடுத்து விட்டு கோபத்தோடு என்னிடமே பணம் கேட்கிறாயா என நான் யார் தெரியுமா என மிரட்டி விட்டு ஆட்டோவை வேகமாக இயக்கிக் கொண்டு சென்றவர்.

சிறிது நேரத்தில் 6 நபர்களை அழைத்துக் கொண்டு மீண்டும் உணவகத்திற்கு வந்து உணவக ஊழியர் சங்கரை, நாற்காலி, குழம்பு பக்கெட்டை வைத்து சரமாறியாக அடித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த தாக்குதலில் தலை, முதுகு, கையில் அடிப்பட்டு ரத்த காயத்தோடு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்ற சங்கர் சிகிச்சை பெற்று சிசிடிவி காட்சியோடு தாம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் தாம்பரம் காவல்துறையினர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட போதை ஆசாமிகள் கடப்பேரி பகுதியை சேர்ந்த கருப்பு(எ)வெங்கடேஷ், சுரேஷ்(எ) உதயா ஆகிய இருவரை கைது செய்து அவர்கள் மீது ஆபாசமாக பேசுவது, தாக்கி காயம் விளைவித்தல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், பொதுச்சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.